செவ்வாய், 20 ஜூலை, 2010

சுசந்திகாவிற்கு வெள்ளிப் பதக்கம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை குறுந்தூர ஓட்டச் சம்பியனான சுசந்திகா ஜயசிங்க பெற்ற வெண்கலப் பதக்கத்துக்கு பதிலாக வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற அமெரிக்க வீராங்கனையான மேரியன் ஜோன்ஸின் தடைவிதிக்கப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் அவரது பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெள்ளிப் பதக்கத்தை சுசந்திகாவுக்கு வழங்க முடிவுசெய்தது.

சுசந்திக்காவிற்குரிய பதக்கத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து நேற்று வழங்கினார்.

கருத்துகள் இல்லை: