திங்கள், 19 ஜூலை, 2010

வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தார் அடுத்த முதல்வர் அன்புமணி-காடுவெட்டி குரு

திமுகவிலும், அதிமுகவிலும் ஒரு வன்னியர் கூட இருக்கக் கூடாது. அத்தனை பேரும் அங்கிருந்து விலகிட வேண்டும். அனைத்து வன்னியர்களும் பாமகவுக்கே வாக்களித்தால் அடுத்தமுதல்வர் அன்புமணிதான் என்பதில் சந்தேகம் இல்லை என வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அழைப்பு விடுத்துள்ளார்.

சீர்காழியை அடுத்த பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மனைவியார் சரஸ்வதி அம்மாள் தலைமையில் நடந்தது. ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, வன்னிய சங்க தலைவர் குரு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, பசுமை தாயகம் தலைவரும், ராமதாஸின் மருமகளுமான சவுமியா அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசுகையில்,

தமிழகத்திலேயே மிகப்பெரிய ஜாதி வன்னிய ஜாதி. ஆனால் இன்று ஒடுக்கபட்டு அரசியல் கட்சியிடம் கையேந்தும் நிலை உள்ளது. 2 கோடி வன்னியர்கள் ராமதாஸ் தலைமையில் அணி திரள வேண்டும்.

1952ல் இருந்து நம் வன்னிய மக்களுக்கு கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

அனைவரும் சாதி சங்கம் வைக்கும்போது வன்னியர் சங்கம் வைத்தால் தப்பா? எனவே எந்த வன்னியனும் தி.மு.க., அ.தி.மு.க. என எந்த கட்சியிலும் இருக்கக் கூடாது.

வன்னியர் ஓட்டுகள் பா.ம.க.வுக்கு என்று முடிவு எடுத்தால் அடுத்த முதல்வர் அன்புமணி தான் என்றார் குரு.
பதிவு செய்தவர்: மக்கள் ஆதரவளர்கள்
பதிவு செய்தது: 19 Jul 2010 6:47 pm
அரசியல் ஒரு சாக்கடை நேற்று நீ அம்மா என்றாய் இன்று நீ தாத்தா என்றாய் இனி இரண்டும் வேண்டாம் என்கிறாய் மக்கள் என்ன உன் வீட்டு ஆட்டு மந்தையா முதலில் தானக்கு என்று ஒரு வழியை வைத்துக்கொள்ளுங்கள் அரசியலில்

கருத்துகள் இல்லை: