திங்கள், 19 ஜூலை, 2010

கார்த்தி-தமன்னா காதலும் கல்யாணத்தில் முடியும்?

பையா படத்திற்கு பிறகு கார்த்தி-தமன்னா காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அடுத்து சிறுத்தை படத்திலும் இந்த ஜோடி இணைய...கிசுகிசு அதிகமானது.>நாங்கள் காதலர்கள் அல்ல. நல்ல நண்பர்கள் என்று கார்த்தியும், தமன்னாவும் மாறி மாறி சொல்லிவந்தனர்.திருப்பூரில் நடந்த விழா ஒன்றி பேசிய கார்த்தி, அண்ணன் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரைத் தான் நான் ஃபாலோ பண்ணுகிறேன் என்று பேசினார்.
இதுதான் சமயம் என்று ரசிகர்கள் எழுந்து, காதலிலும் அண்ணனை ஃபாலோ பண்ணுவீங்களா. அண்ணன் சூர்யா ஜோதிகாவை லவ் பண்ணி கல்யாணம் செய்துகொண்டார். அதுபோலவே நீங்களூம் தமன்னாவை கல்யாணம் செய்து கொள்ளுவீங்களா என்று கேட்க, இப்படியெல்லாம் மடக்குறீங்களே என்று சிரித்து மழுப்பினார் கார்த்தி.இன்று சத்யம் தியேட்டரில் நடந்த நான் மகான் அல்ல பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் இந்த காதல் விவகாரமே மெயின் டாபிக்.இவ்விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும் போது, பையா படம் பெரிய ஹிட். அதில் நடித்த கார்த்தி-தமன்னா காதல் கிசுகிசுதான் இப்போ ஹாட். >ஆனால் கார்த்தி அப்படிப்பட்ட ஆள் அல்ல. அவர் குடும்ப குத்துவிளக்கு. அவர் யாரையும் லவ் பண்ணமாட்டார்’’ என்றார்.>விழா மேடைக்கு எதிரே பார்வையாளர்கள் வரிசையில் இருந்த கார்த்தியின் அம்மா சிரித்தபடியே இருந்தார்.கார்த்தி பேசும் போது, ‘’எனக்கும் தமன்னாவுக்கும் காதல் என்று எல்லோரும் பேசுறாங்க. ஆனால்  என் திருமணம் அம்மா, அப்பா பார்த்து செய்யும் அரேஞ்சுடு மேரேஜ்தான்’’ என்று சிரித்தார்.காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் செய்யும் திருமணமும் ஒருவகையில் அரேஞ்சுடு மேரேஜ்தான். சூர்யா-ஜோதிகா காதலையும் சிவக்குமார் ஏற்றுக்கொண்டு நடத்தி வைத்தார்.
எல்லா விசயத்திலும் அண்ணனை ஃபாலோ பண்ணும் கார்த்தி காதல் விசயத்தில் மட்டும் ஃபாலோ பண்ண மாட்டாரா என்ன.
இவரின் காதலும் பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணத்தில் முடியலாம்.

கருத்துகள் இல்லை: