வியாழன், 22 ஜூலை, 2010

ப.சிதம்பரம,எனது பொறுப்புகளை யாராவது ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்-ப.சிதம்பரம்

என்னை விட நன்றாக செயல்பட முடியும் என்று நினைக்கும் யாராவது எனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங் தொடர்ந்து ப.சிதம்பரத்தை விமர்சித்தபடி உள்ளார். நக்சலைட் பிரச்சினையில் ப.சிதம்பரத்தின் அணுகுமுறையை அவர் சாடி வருகிறார்.

சமீபத்தில் மீண்டும் திக்விஜய் சிங், ப.சிதம்பரத்தை விமர்சித்துப் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

அவர் கூறுகையில், திக்விஜய் சிங் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர். எனக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அதை நான் செய்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு திறமையாகவே செயல்படுவதாக கருதுகிறேன். ஒரு வேளை என்னை விடசிறப்பாக செய்ய முடியும் என யாராவது நினைத்தால் தாராளமாக அவர்கள் எனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளலாம். நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார் சிதம்பரம்.
பதிவு செய்தவர்: வழிப்போக்கன்
பதிவு செய்தது: 22 Jul 2010 5:50 pm
ஆமாம் வெங்காயம். இவன் அடித்த மூட்டை- நீலாங்கரயிலிருந்து பாண்டிச்சேரி வரை கடற்கரை சாலையில் தன குடுமபத்து பெயரிலும் தனது பெனாமி பெயரிலும் ஏகர் ஏகராக சொத்து இன்னும் பத்து தலைமுறைக்காவது காணும். பசுதோல் போர்த்திய புலி இவன். வெள்ளை வெட்டி கட்டிய வடிகட்டின அயோக்கியன்.

பதிவு செய்தவர்: மதுரை தம்பி
பதிவு செய்தது: 22 Jul 2010 5:36 pm
மிகவும் சரியாக சொன்னிங்க சிதம்பரம் சார்... சிவகங்கை தொகுதியில கிடைத்த தோழ்வியவே வெற்றி ஆக மாற்றியவர் அல்லவா நீங்கள் .... போயா போ... வெட்டியா பேசாம உருப்படியா நாட்டுக்கு எஅதாவ்து செய்ய பாரு...

கருத்துகள் இல்லை: