வியாழன், 22 ஜூலை, 2010

நடிகை நந்திதாதாஸ் சர்ச்சை: அரசு வட்டார விளக்கம்

நடிகை நந்திதாதாஸ் இந்திய குழந்தைகள் திரைப்பட கழகத்தின் தலைவராக இருக்கிறார்.  இந்த கழகத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சுஷோவன் பானர்ஜி.  இவர் நந்திதாதாஸ் மீது புகார் கூறியுள்ளார்.
அரசு செலவில் அடிக்கடி தனியார் விமானங்களில் பறக்கிறார் என்று அவர் புகார் கூறியுள்ளார். கழக தலைவர் எகானமி கிளாசில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொள்ளத்தான் விதிமுறை உள்ளது.
அதைத்தான் கழக தலைவராக இருந்த ஒவ்வொருவரும் பின்பற்றி வருகின்றனர்.  ஆனால் நந்திதா அதை மீறி பிசினஸ் கிளாசில் தனியார் விமானங்களில் அரசு செலவில் பறக்கிறார்’’ என்று பானர்ஜி கூறிய குற்றச்சாட்டு குறித்து நந்திதா விளக்கம் அளித்துள்ளார்.
அவர்,  ‘’என் மீது கூறப்படும் புகாருக்கு எந்தவித ஆதாரமும் இல்லை.  காரணம் நான் 8 மாதங்களாக மும்பையில்தான் உள்ளேன்.  எங்கும் பயணம் மேற்கொள்ளவில்லை’’என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள், 

‘’கழகத்தில் பானர்ஜி பணியாற்றும் போது நந்திதா மீது வெறுப்பில் இருக்கிறார்.  அவர் நந்திதாவுடன் சுமூகமாக பணியாற்றவில்லை’’ என்று தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: