செவ்வாய், 20 ஜூலை, 2010

சாவகச்சேரியில் கள் அருந்திய ஒருவர் பலி; பலர் மயங்கிவீழ்ந்தனர்

யாழ். சாவகச்சேரியில் கள்விற்பனை நிலையமொன்றில் இன்று மாலை கள் அருந்தி மயங்கி விழுந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துடன் மேலும் 6 பேர் யாழ். வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள் அருந்தியவுடன் மயக்கமான 7 பேர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போதே ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 50 வயதான சின்னப்பு செல்வராசா என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.  6 பேர் தற்போது யாழ். வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
http://www.tamil.dailymirror.lk/

கருத்துகள் இல்லை: