செவ்வாய், 20 ஜூலை, 2010

கண்ணிவெடி அகற்றும் பணியில் முன்னாள் விடுதலைப்புலி பெண் போராளிகள்


வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முன்னாள் விடுதலைப்புலி பெண் உறுப்பினர்கள் 30 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனப் பாதுகாப்புப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கண்ணி வெடிகள் அகற்றும் பணியில் இராணுவப் படையினர் தவிர்ந்த 6 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விடுதலைப்புலி பெண் உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தின் கீழ் பணி புரிகின்றனர்.
வடபகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதில் 90 வீதமான பணிகள் இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்படுகின்றது எனப் பாதுகாப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை: