சனி, 24 ஜூலை, 2010

யாழ்ப்பாணம் நெடுந்தீவுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்

 

யாழ்ப்பாணம் நெடுந்தீவுப்பகுதியில ஆண் ஒருவரின் சடலம் கரை  ஒதுங்கியுள்ளது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க இந்த ஆணின் சடலம் அடையாளம் காணப்படவில்லை.

சடலம் நிர்வாணமான நிலையில் உடைகள் எவையுமின்றிக் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்த ஊர்காவற்துறை நீதவான் வசந்தசேனன் விசாரணைகளை மேற்கொண்டார். கடற்படையினரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தமிழக மீனவருடைய சடலமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: