செவ்வாய், 8 ஜூன், 2021

மருத்துவமனை கழிவறையில் செவிலியர் சுப்புலட்சுமி பிணமாக மீட்பு... மதுரை உசிலம்பட்டியில் பூபதியம்மாள் மருத்துவ

   மதுரை உசிலம்பட்டியில் பூபதியம்மாள் மருத்துவ மனையில் செவிலியராக கடமை புரிந்து வந்த செவிலியர் சுப்புலட்சுமி (தலித்) மர்மமான முறையில் இறந்துள்ளார்
May be an image of 2 people and text that says 'தீண்டாமை தமிழ்நாடு நிலகுரல் #Justice_For_Nurse_Subbulatchumi தீண்டாமை படுகொலை மதுரை உசிலம்பட்டி பூபதியம்மாள் மருத்துவனையில் பணிபுரிந்து வந்த தலித் பெண் செவிலியர் சுப்புலட்சிமியை சாதி பெயரை குறிப்பிட்டு அவமதித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி மர்மமான முறையில் மருத்துவமனையிலேயே இறந்துள்ளார் மேலும் சாதி இந்து கள்ளர் முருகன்ஜீ என்பவரின் பேச்சை கேட்டுக்கொண்டு காவல்துறை நீதி கேட்டு வந்த மக்களை மிரட்டி உடனடியாக உடற்கூராய்வு முடித்து தகனம் செய்துள்ளது காவல்துறை. தீண்டாமை வெறி பூபதியம்மாள் மருத்துமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..'

சில நாட்களுக்கு முன்பு இவரை சாதியின் பெயர் குறிப்பிட்டு மருத்துவ மனை நிர்வாகம் அவமானப்படுத்தி உள்ளது .
இந்த நிலையில் இவர் மருத்துவ மனையின் கழிவறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்
இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிகிறது  வேறு சாதியை சேர்ந்த முருகன்ஜி என்பவரின் செல்வாக்கால் போலீசார் இவரின் உடலை அவசமாக உடல்கூறாய்வு செய்து எரித்துள்ளது  
நீதி கேட்டு வந்த மக்களை போலீஸ் மிரட்டி கலைத்தாகவும் தெரிகிறது

கருத்துகள் இல்லை: