வியாழன், 2 மார்ச், 2017

ராமதாஸ் :சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸ் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், சீனிவாசன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து வந்துள்ளனர். தண்டிக்கப்பட்ட குற்றவாளியை சிறையில் போய் பார்ப்பது எல்லா வகையிலும் தவறு. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள், கட்சியில் பதவி வகிக்கக் கூடாது. இதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார். நக்கீரன்

கருத்துகள் இல்லை: