
இதனிடையே சசிகலா புஸ்பாவிற்கு ஆதரவாகச் செயல்பட்ட சென்னை தொழில் அதிபர் ஹரிநாடாரும் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சூழலில் நேற்று ஜான்சி ராணியும், பானுமதியும், சசிகலா புஸ்பா மீது கொடுத்த பாலியல் புகாரினை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எஸ்.பி.அஸ்வின்கோட்னீசுக்கு மனுவை அனுப்ப அவர் விசாரணைக்காக அதனை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். சசிகலா புஸ்பா மீது பாலியல் புகார் குற்றச் சாட்டுக்களை கூறிய சகோதரிகள் திடீரென அதனை மறுத்து வாபஸ் பெற வந்தது அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் இன்று திசையன்விளை காவல் நிலையத்திற்கு வந்த ஜான்சிராணி, தன் சகோதரி பானுமதியை 4.30 மணி முதல் காணவில்லை. யாரோ கடத்திச் சென்று விட்டார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறார்.
குற்றச்சாட்டு மறுப்பிற்குப் பின்பு பானுமதி கடத்தப்பட்டது பரபரப்பைக்கிளப்பிய நிலையில் நாம் வள்ளியூர் டி.எஸ்.பி.பாலஜியைத் தொடர்பு கொண்டதில் புகாரின் அடிப்படையில் பானுமதியை தேடிவருகிறோம். என்றார்.>மீண்டும் பரப்பாகியிருக்கிறார் சசிகலா புஸ்பா.
-பரமசிவன்;படங்கள் : ப.இராம்குமார் nakkeeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக