புதன், 1 மார்ச், 2017

ஜெயாவின் சிகிச்சை விபரங்களை தீபாவும் தீபக்கும் சட்டப்படி கேட்கலாம்! கேட்டார்களா? இல்லையே! ஏன்? பணம்... பதவி... புகழ்...

ஜெ., மரண மர்மத்தை மறைப்பது அப்பல்லோ-தமிழக அரசு மட்டுமல்ல…உயிலுக்கு உரிமை கோரும் தீபாவும் தீபக்கும்தான். யார் யாரோ பொதுநல வழக்கு போட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இரத்த சொந்தமான தீபாவும் தீபக்கும் சிகிச்சை விவரங்களை கேட்டால் அப்பல்லோ கொடுத்துதான் ஆகவேண்டும்.< நீதிமன்றமே சொல்லியும்கூட அமைதி காக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா பெயரில் பேரவை தொடங்கி கல்லாக்கட்டுவதோடு அதிமுகவை கைப்பற்றும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் தீபா. கடன் வாங்கியாவது 100 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டு பல்லாயிரம் கோடிரூபாய் சொத்துக்களை மீட்கப்பார்க்கிறார் தீபக். ஆக மொத்தம், இவர்களுக்கு ஜெயலலிதாவின் ‘உயிர்’ மீது அக்கறயில்லை… ‘உயில்’ மீதுதான் என்பதை புரிந்துகொள்ளவில்லை அதிமுக தொண்டர்கள். அந்தளவுக்கெல்லாம் விவரம் இருந்தா தினமும் தீபா வீட்டு முன் குவிந்து தரிசனம் செய்துகொண்டிருக்கமாட்டார்களே!!!! வேபுலகம்

கருத்துகள் இல்லை: