திங்கள், 27 பிப்ரவரி, 2017

எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க....3 நாள் டெல்லி பயணம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார். 3 நாள் பயணமாக டெல்லிக்கு செல்கிறார். பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, 'வர்தா' புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதி, மின் திட்டங்களுக்கான சிறப்பு நிதி உட்பட, மாநிலத்திற்கான பல்வகை நிதியுதவிகளை உடனே வழங்க வேண்டும் என, வலியுறுத்துவார் என, தெரிகிறது. மேலும், நீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என, கேட்டுக் கொள்வார் என்று, தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் இரண்டவது முறையக பிரதமரை சந்திக்கிறார். நக்கீரன்

கருத்துகள் இல்லை: