செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

எடப்பாடி பழனிச்சாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே பனிப்போர் ஆரம்பம்.

1) பதவி ஏற்ற பிறகு சசிகலாவை எடப்பாடி சந்திக்கவில்லை.
2) தினகரன் மூலம் சசிகலா ஒப்புதல் அளித்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிட மாற்றல் பட்டியலை நிராகரித்தார் எடப்பாடி.
3) தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை மாற்றிவிட்டு, நடராஜன் ஆதரவாளர் சண்முகத்தை நியமிக்குமாறு மாஃபியா கும்பல் கூறியதை எடப்பாடி ஏற்க மறுத்துவிட்டார்.
4) மாஃபியா கும்பலை கட்சியில இருந்து ஒட்டுமொத்தமாக விலக்கி வைக்க எடப்பாடி திட்டம். பன்னீரை சேர்த்துக்கொள்ளவும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது ,
5) உள்ளாட்சித் தேர்தலில் சிறிதளவாவது வெற்றியை பெற மாஃபியா குடும்பத்தை வெளியேற்றுவது அவசியம் என எடப்பாடி கருதுவதாக தகவல்.
6) சசிகலா பினாமி ஆட்சி என கூறுவதை அறவே வெறுக்கிறார் எடப்பாடி.
7) இது ஒருபுறம் இருக்க செங்கோட்டையன், ஜெயகுமார், தம்பிதுரை தனி குழுவாக செயல்படுவது சசிகலாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
8. சசிகலா ஆதரவு MLAக்கள் தங்கள் தொகுதிக்குள் நுழையமுடியாத சூழ்நிலையில் அவர்களும் தங்கள் எரிச்சலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒருபுறம் மாஃபியா கும்பலை வெளியேற்ற எல்லா வேலைகளும் கணஜோராக நடைபெற்று கொண்டுள்ளது. இன்னொருபுறம், தொண்டர்கள் நிலமைதான் திருவிழாக்கூட்டத்தில் காணாமல் போன குழந்தை நிலமையில் உள்ளது.  முகநூல் பதிவு.. தினகரன் அரசு

கருத்துகள் இல்லை: