புதன், 1 மார்ச், 2017

குடி கூத்து கும்மாளம் ... ரஜினியின் வாரிசு?

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, நேற்று அதிகாலை தனது காரை, ஆட்டோ ஒன்றின் மீது மோதி டிரைவருக்கு காயத்தை ஏற்படுத்திவிட்டார். என்ன நடந்தது என்று சில சமூகவலைத் தளங்கள் கூறுவதைப் படியுங்கள் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா கணவன் மனைவி பிரச்சனை காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்கிறார். குவிந்து கிடக்கும் பணம், தட்டிக் கேட்க யாரும் இல்லை. ரஜினி பேச்சுக்கும் பெரிய மரியாதை இல்லை. மருமகன் தனுஷின் அதீத தலையீடு வாரத்தில் மூன்று நாட்கள் பார்ட்டி, பப், குடி ஆட்டம் பாட்டம், என ஜாலியை மட்டுமே அனுபவிக்கும் அவல நிலையில் ரஜினி மகள்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு தனது வீட்டை விட்டு கிளம்பிய சௌந்தர்யா, ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள உயர்தர ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இரண்டு நாட்களாக ‘அவருடன்’ தான் தங்கியுள்ளார் குடி கூத்து என அமர்க்களமாக இருந்தவர் செவ்வாய்க்கிழமை காலையில் போதை மாறாத நிலையில் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளார்.
தனது வீட்டிற்கு டி.டி.கே. சாலை வழியாக திரும்பிக் கொண்டிருக்கும்போது, மௌபரிஸ் சாலை அருகில் நின்று கோண்டிருந்த ஆட்டோ மீது சௌதர்யா ஓட்டி வந்த கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆட்டோ கவிழ்ந்து டிரைவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, சம்பவம் நடந்தது அதிகாலை 4.30 மணி என்பதால், சாலையில் நடமாட்டம் இல்லை. இதனால் பதட்டமடைந்த சௌந்தர்யா, உடனடியாக தனது அக்காள் கணவரான நடிகர் தனுஷை மொபைலில் அழைத்து விபரம் சொல்லியிருக்கிறார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த தனுஷ், அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் சமாதானம் பேசி, கொஞ்சம் பணமும் கொடுத்து பிறகு ஓட்டுநரை மருத்துவமனைக்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. சில ஆயிரங்களில் டிரைவரை கவனித்து பிரச்னை இல்லாமல் தப்பி இருக்கிறார்கள் .  லைவ்டே


கருத்துகள் இல்லை: