செவ்வாய், 12 மே, 2020

தமிழ்கத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று

மாலைமலர் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 716 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று - அதிரும் தமிழகம் கொரோனா பரிசோதனை சென்னை: இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 716 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது. 


மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது. 

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: