செவ்வாய், 12 மே, 2020

தமிழ் தேசிய பாசிஸ்டுகளின் முதல் பலி யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா! .. உண்மையில் அவர் யார்?

யாழ்ப்பாணம் பொது சன நூல் நிலயம்! காலை எனது பாடசாலை கதவு எட்டு மணிக்கு தான் திறக்கப்படும். அனேகமான நாட்கள் நான் சற்று முன்னதாகவே அங்கு சென்று விடுவேன், ஓட்டமும் நடையுமாக பொதுசன நூல் நிலையம்
்டபம்தான் எனக்கு அப்போது Google . நிமிடங்களோடு போட்டி போட்டுகொண்டு அங்குள்ள நூல்களை உழுது தள்ளுவேன். அங்குள்ள் ஒவ்வொரு நூலும் எனக்கு ஒரு தங்க சுரங்கமாகவே இருந்தது.
அந்த இனிய காலைப்பொழுதுகளில் அங்கு நானும் நூல்களும் மட்டுமே இருந்தோம் . எங்களின் ராஜ்யத்தின் இடையில் ஒரு அழகான மனிதர் சில நொடிகள் வந்து போவார் . அவர் மெதுவாக நடந்து அந்த நூலகத்தின் அன்றைய தூய்மை ஒழுங்கு போன்றவற்றை கண்களால் கணக்கெடுத்து கொண்டு செல்வார். அங்கு ஒரு தூசி துரும்பும் இருக்க கூடாதே , அங்குள்ள நாற்காலிகளும் மேசைகளும் நூல்களும் ஒழுங்காக அடுக்கி வைக்கபப்ட்டிருக்க வேண்டுமே? என்பதில் அவர் கொண்ட சிரத்தை ஒரு தவம் என்று கூறலாம் .

தூரத்தே இருந்து பார்க்கையில் சில சமயம் ஒரு சில நாற்காலிகள் சற்று ஒழுங்கற்று இருந்தால் மெதுவாக நடந்து வந்து அதை சரியாக்கி விட்டு மெதுவாக நடந்து சென்றுவிடுவார்,அவரை நிமிர்ந்து பார்க்க கூட எனக்கு நேரம் இருக்காது . நான்தான் அந்த கால google பைத்திய்மாச்சே? அவரை பெரியதாக பார்க்கவிடினும் அவரை ரசிப்பேன் அவர் ஒரு அரசியல்வாதி, யாழ்ப்பான மேயர் அல்பிரட் தங்கராஜா துரையப்பா என்பது அவரது பெயர், அவர் அங்கு எந்த நாளும் வந்து பார்த்து பார்த்து அந்த நூலகத்தின் நேர்த்தியை பேணுவது எனக்கு தெரிந்த அளவு வேறு எந்த வாசகனுக்கும் தெரிந்திருக்கிறதோ தெரியவில்லை. 

நானோ சிறியவன் எனக்கு வாக்குரிமை கூட கிடையாது . அந்த மனிதர் அதையெல்லாம் எதிர்பார்ப்பவர் அல்ல . அவர் தேடி நிதம் மக்கள் நலம் நாடிய ஒரு மாமனிதர்.. இன்றோடு யாழ் நூலகம் பற்றி எரிந்து 37 வருடங்கள் ஆகிவிட்டது . அந்த நூலகத்தை எப்படி மறக்க முடியாதோ அது போலவே அந்த நல்ல மனிதரையும் என்னால் மறக்க முடியாது .
நோக்கி சென்றுவிடுவேன், எனது பொன்னான சுமார் இருபது முப்பது நிமிடங்கள் அங்குதான் . அந்த நூல் நிலையத்தின் அன்றைய முதல் வாசகனாக நான் இருப்பேன், நூலகத்தின் மேல் தளத்தில் உள்ள நூலக ( reference section) படிப்பு மண
Kandasamy Sundrampillai எத்தனைபேர் யாழ்மானகரசபைக்கு மேயர்களாக வந்திருக்கலாம். ஆனைல் அன்றையநாளில் "யாழ்நகரத்தைப் பட்டொழிவீசவைத்த"ஒரு பெருந்தகை.வையத்து வாழ்வாங்கு வாழ்வார்.

Rubasangary Veerasingam Gnanasangary : உலகத் தமிழாராட்சி மாநாட்டை அன்றைய சிறிமாவோ அரசு யாழ்ப்பாணத்தில் நடத்துவதை விரும்பவில்லை. அதற்கான காரணங்கள் நியாயமானதே. அக்கால கட்டத்தில்தான் தமிழ் ஆயுத இயக்கங்கள் முளைவிடத் தொடங்கி இருந்தன. தமிழ் அரசியல் கட்சிகள் பிரிவினைவாதம் பேசுவது உச்சக்கட்டத்தில் இருந்தது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடாத்துவதற்கு அரசே அனுசரணை வழங்கவும் முன்வந்தது. ஆனால் விடாபிடியாக யாழ்ப்பாணத்தில்தான் நடத்திக் காட்டுவோம் என்று நடத்தினார்கள்.
அதனால் அரசு பல முட்டுக்கட்டைகளை செய்து வந்தது. அதில் ஒன்றுதான் தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பேசுபவர்களது வீசா மறுக்கப்பட்டமை. மறவன்புலவு சச்சிதானந்தன் அது பற்றி ஒரு நூலே எழுதியுள்ளார்.
 டாக்டர் ஜனார்த்தனன்கூட அது பற்றி எழுதியுள்ளார். அதன்படி டாக்டர் ஜனார்த்தனனுக்கு வீசா மறுக்கப்பட அவர் மலேசியா சென்று அங்கு வீசா பெற்று கொழும்பு வர திருப்பி அனுப்பப் படுகிறார். அதன்பின்னர் சட்டவிரோதமாக படகுமூலம் யாழ்ப்பாணம் வந்து ஒழித்து வைக்கப்பட்டார். அது பற்றி அறிந்த காவல்துறை அவரை கைது செய்வதற்கான கண்காணிப்பை முழுமுனைப்புடன் முடக்கி விட்டிருந்தது.
1974 சனவரி 10 இல் எனக்கு ரெண்டுவயது மட்டுமே. அவர்களில் நூல்களின் அடிப்படையில் அன்று டாக்டர் ஜனார்த்தனன் அவர்கள் மேடை ஏறுகிறார். போலீசை நெருங்க விடாதபடி இளைஞர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர். அதனால் ஏற்பட்ட கைகலப்பில் பொலிஸ் வானத்தை நோக்கி சுடுகிறது. கடுமையான சனநெரிசல் மத்தியில் மக்கள் சிதறி ஓடுகின்றனர். மின்கம்பி ஒன்றும் அறுந்து விழுகிறது. மின் தாக்கியும் சன நெரிசலில் மிதிபட்டும் பதினொருவர் வீரமரணம் அடைகின்றனர். இந்த விபத்துக்கு அல்பிரட் துரையப்பா எப்படி காரணமாக முடியும்?

Radha Manohar : ஸ்ரீ மாவோ அம்மையார் அது ஒரு சர்வதேச மாநாடு என்பதால் கொழும்பு பண்டரநாயக மண்டபத்தில் செய்யலாம் அதற்கு அரசு முழு உதவியும் வழங்கும் என்று கூறினார் . யாழ்ப்பாண தொகுதியில் அல்பிரட் துரையப்பாவை எப்படியாவது எதிர்காலத்தில் வெற்றி பெற விடக்கூடாது என்ற எண்ணத்தில்
அமிர்தலிங்கம் போன்றோர் அந்த மாநாட்டை ஒரு தமிழரசு கட்சி மாநாடு போல யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டார் அவரது எண்ணம் நிறைவேறியது .தமிழுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லாமல் வெறும் தமிழரசு கட்சி மாநாடு போல அது நடந்தது .

யாழ்ப்பாண மேயராக இருந்த துரையப்பாவுக்கு அழைப்பு இல்லை .போலீசிடம் அனுமதியும் பெறவில்லை .அவர்களை ஆத்திரம் ஊட்டி கலவரத்தை உண்டாக்கி தமிழரசு கட்சியின் தேர்தல் வெற்றிகளை குவிக்கவே அதை பயன்படுத்தினார்கள் . போலீசார் மின்கம்பியை சுட்டு வீழ்த்தினார்கள் மின்சாரம் தாக்கி இறப்புக்கள் நிகழ்ந்தன. இந்த காலக்கட்டத்தில்தான் அமிர்தலிங்கம் இளைஞர்களை தூண்டி விட்டு தனது அரசியலை உறுதிப்படுத்த முனைந்த காலக்கட்டம் .

அமிர்தலிங்கம் யார் யாரை எல்லாம் துரோகி என்று மேடைகளில் சுட்டி காட்டுவாரோ அவர்களை நோக்கி இளைஞர்கள் பாய்வார்கள் . அப்படி முதல்முதலில் முக்கியமாக சுட்டி காட்டி கொல்லப்பட்டவர்தான் அல்பிரட் துரையப்பா . அரசியலில் அவரை எதிர்கொள்ள முடியாத அமிர்தலிங்கம் போன்றோரின் ஸ்பான்சரில் பிரபாகரன் போன்ர்ரோ செய்த படு பாதக கொலை அது . அந்த மாநாட்டை தமிழரின் சைவமும் தமிழும் நம்மிரு கண்கள் என்று காட்ட முன்னின்ற பிற்போக்குவாதிகளில் ஒரு முக்கிய நபர்தான் சச்சிதானந்தம் என்பவர் .இவர்தான் தற்போது இலங்கை சிவசேனா தலைவராகும் . அப்போது இவர் அப்போது எழுதிய நூலின் பெயர் "எனது யாழ்ப்பாணமே" என்பதாகும்.

  பஞ்சாபில் அகாலி தளத்தை ஒழித்து கட்ட காலிஸ்தான் பிந்தரன்வாலேக்கு இந்திர காந்தி ஆதரவு கொடுத்தது போலத்தான் அல்பிரட் துரையப்பாவை ஒழித்து கட்ட பிரபாகரன போன்றவர்களை வளர்த்து விட்டார் அமிர்தலிங்கம் . பின்பு பிரபாகரன் அமிர்தலிங்கத்தை கொன்றார் .

கருத்துகள் இல்லை: