;இந்நிலையில் இன்று மாலை ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக கட்சியின் தலைமை கழக பேச்சாளரான ஆவடி குமார் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய தனது காரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கடத்தியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிகாரிகள் ஆவடி குமாரின் காரை தேர்தல் சோதனையிட்டு, அவரிடம் விசாரணை நடத்திவருகிறார். இதனால் அந்தப்பகுதியில் கட்சிக்காரர்களும் பொதுமக்களும் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து பேசிய ஆவடி குமார், டிடிவி தினகரன் தரப்பு வேண்டுமென்றே தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக கூறினார். மெலும் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றார் ஆவடி குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக