திங்கள், 11 டிசம்பர், 2017

8000 சமணர்களை கொன்றுதான் பிராமண மதம் இங்கு காலூன்றியது

சமணர்களையும் பௌத்தவர்களையும் கொன்று கழுவேற்றிதான் பிராமண மதம் இங்கே காலூன்றியது .. பௌத்த விகாரங்களை அழித்தும் சமணர்களின் கோவில்களை இடித்தும் தான் இங்கே கோவில் வந்ததென்பதை அறிவுசார்ந்த ஆய்வுகளோடுதான் திருமா பேசியிருக்கிறார்.. அதனால்தான் பார்பனர்கள் பதறுகிறார்கள்.. தீக்குளிப்பேன் என்றெல்லாம் பேசுகிறார்கள்.. இங்கே யாரும் இந்து மத கோவில்களை இடிக்க சொல்லவில்லை மாறாக திருமா.. கோவிலை இடித்து மசூதி வந்ததாக சொல்லி ராமர் கோவில் கட்டவேண்டுமென்கிறீர்களே அதைப்போல் சமணர்கள் வழிபாட்டுதலம் குகைகள் கோவில்களாக உருமாறியிருக்கிறதே .. உச்சிபிள்ளையார் கோவில் ஸ்ரீரங்கம் காஞ்சி திருப்பதியென.. அதையெல்லாம் என்ன செய்வதென்று கேட்டார்..
தோழர் ஆலஞ்சியார் அவர்களின் பதிவு.
*****************************************
ஐம்பெரும் காப்பியங்கள்..
சிலப்பதிகாரம்.. மணிமேகலை சீவகசிந்தாமணி.. வளையாபதி குண்டலகேசி ..
சிலப்பதிகாரமும் சீவக சிந்தாமணி வளையாபதி சமணர்கள் காப்பியம்/வாழ்வியல் ..
மணிமேகலை குண்டலகேசி பௌத்தவ காப்பியம்..
..
சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதபட்டது.. சங்கம் மருவிய காலத்தில் எழுதபட்டது
குண்டலகேசி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதபட்டதாக சொல்லபடுகிறது..
தமிழ் மண்ணில் சமணமும் பௌத்தமும் மட்டுமே நிலைபெற்றிருந்ததை இந்த ஐம்பெரும் காப்பியங்கள் நமக்கு உணர்த்தும்..
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. ..

சிலப்பதிகாரம் மணிமேகலை பெரியபுராணம் மட்டுமே தமிழ் களத்தை மைய்யமாக கொண்டு எழுதபட்டது மற்றவைகள் பிற ஆதிக்கத்தை நமக்கு உணர்த்துவதாக அமைந்தது
மணிமேகலையும் குண்டலகேசியும்.. பௌத்தனத்தை தழுவியதால் அது பௌத்தத்தை பேசியதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்..
..
சமணர்களையும் பௌத்தவர்களையும் கொன்று கழுவேற்றிதான் பிராமண மதம் இங்கே காலூன்றியது .. பௌத்த விகாரங்களை அழித்தும் சமணர்களின் கோவில்களை இடித்தும் தான் இங்கே கோவில் வந்ததென்பதை அறிவுசார்ந்த ஆய்வுகளோடுதான் திருமா பேசியிருக்கிறார்..
அதனால்தான் பார்பனர்கள் பதறுகிறார்கள்.. தீக்குளிப்பேன் என்றெல்லாம் பேசுகிறார்கள்.. இங்கே யாரும் இந்து மத கோவில்களை இடிக்க சொல்லவில்லை மாறாக திருமா.. கோவிலை இடித்து மசூதி வந்ததாக சொல்லி ராமர் கோவில் கட்டவேண்டுமென்கிறீர்களே அதைப்போல் சமணர்கள் வழிபாட்டுதலம் குகைகள் கோவில்களாக உருமாறியிருக்கிறதே .. உச்சிபிள்ளையார் கோவில் ஸ்ரீரங்கம் காஞ்சி திருப்பதியென.. அதையெல்லாம் என்ன செய்வதென்று கேட்டார்..
ஆம்..
ஏழாம் நூற்றாண்டில் சமணர்கள் ஒட்டுமொத்தமாக 8000 மேற்பட்டவர்கள் கழுவேற்றினார்கள் சமணர்களையும் பௌத்தவர்களை வீழ்த்தி இங்கே ஆரியர்கள் காலூன்றினார்கள் அரசர்களின் கையிலாக்கி ஆரியர்கள் தங்களின் மதத்தை இங்கே வேகமாக பரப்பினார்கள் இதுதானே வரலாறு .. மன்னர்கள் சமணத்தை துறந்து சைவ மதத்தை பின்பற்றி போதுதான் இங்கே சைவ வைணவ கோவில்கள் வந்தது இன்றைக்கு சில கோவில்களில் சமணபடுக்கைகளை காணலாம்..
தமிழனுக்கு ஏன் இந்திய துணைகண்டத்திலேயே ஆரிய மதம் வந்துதானே தவிர அதன் பூர்வீகம் இந்த பூமியல்ல
..
திருமாவின் தலைக்கு 1 கோடி விலைபேசுகிறார்கள்.. பாவம் களம் தெரியாமல் இங்கே வேறுவிதமாக எதிர்வினை வரும்.. இருக்குமிடம் தெரியாமல் போவீர்கள்..
திருமாவின் பேச்சின் ஒளிந்துகிடக்கிற உண்மைகள் தமிழர்களுக்கு தெரிய நல் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.. எதிராளிகளில் பதற்றமும் உளறலும்..
..
தமிழனுக்கு மதம் என்பதே ஆரியர் வரவிற்கு பிறகும் பின்.. தொடர்ந்து வந்த மொகலாய ஆங்கிலேயர் வரவிற்கு பிறகே தவிர.. அதற்கு முன்பில்லை சமண சமயத்தையும் தொடர்ந்து பௌத்தமுமே அவனை முதலில் ஆட்கொண்டது .. இப்போது கூட காஞ்சியிலும்.. மாமல்லபுரத்திலும் நிறைய சமண வரலாற்று சுவடுகளை காணலாம். சமணத்தை அழித்து சைவமும் வைணவமும் வளர்ந்தது.. சமணசமயத்தை வளர்த்த அரசர்கள் பின் மாறி ஆரியமதத்திற்கு வந்ததாகவும் அதன்பிறகு கோவில்கள் அதிகளவில் வைணவத்தை பறைசாற்றியதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.. இல்லை அது புனைவென்றும் ஒட்டுமொத்தமாக சைவ மதத்தை மாற மன்னர் பணித்ததை மறுத்ததால் கழுவேற்றம் நடந்ததாக சொல்லபடுகிறது.. இதிலிருந்தே சமணமே இங்கே நிலைத்திருந்தது என்பதும்
ஆரிய மதமான வைணவமும் சைவமும் வந்தேறிய மதங்களென்றும் உறுதியாகிறது..
..
அதைதான் திருமா மிக தெளிவாக சொன்னதும் பார்பனர்கள் பதறுகிறார்கள். இது அறிவுசார் பூமி இங்கே அவர்களின் எண்ணங்கள் ஈடேறாது.. வரலாற்றை பேச ஆரம்பித்தால் விரட்டியடிக்கும் நிலை வரும்.. எச்.ராசா தீக்குளிப்பை இந்த நாடு இவ்வளவு ஆவலாக எதிர்பார்பதிலிருந்தே இந்த கெட்டஎண்ணம் கொண்டவர்கள் சாதி மோதலை உருவாக்க பார்ப்பது தெரிகிறது..
அவர்கள் எண்ணம் ஈடேறாது..

கருத்துகள் இல்லை: