புதன், 13 டிசம்பர், 2017

குமரிக்கண்டத்தில் தமிழர்களால் அமைக்கப்பட்ட பாலம் ... ராமேஸ்வரம் தலைமன்னார் பாலம்

புதுடில்லி, :  லெமுரியா கண்டம் என்று அழைக்கப்படும் குமரிக்கண்டத்தில் அமைந்துள்ள பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  கடல் பெருக்கெடுப்பால் மூழ்கடிக்கப்பட்டது  குமரிக்கண்டம். அங்கு ஓங்கி இருந்த  பூம்புகார் நாகரீக வரலாற்று உன்மைகள  இன்று படிப்படியாக வெளிவருகிறது ,
தென் தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய திராவிட மக்கள் அமைத்த  இந்த பாலம் பிற்காலத்தில் பார்ப்பனர்களால்  'ராமர் சேது'  பெயர் சூட்டபட்டது. இந்நிலையில் அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் ஒன்று நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2நிமிட அந்த ஆவணபடத்தில்  இதுவரை காலமும் இயற்கையால் அமைந்த ஆடம்ஸ்பிரிட்ஜ் என்று நம்பப்பட்ட பாலம் மனிதனால் உருவாக்கப்பட்ட பாலமாக இருக்கிலாம் என்று கூறி உள்ளது , நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் என கூறியுள்ளது

கருத்துகள் இல்லை: