புதன், 25 ஜனவரி, 2017

சென்னை போலீஸ் கமிஷனரை(ஜோர்ஜ்) மாற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Stalinசென்னை மெரினா போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உடனடியாக விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் , ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மாணவர்கள் போராட்டத்தை முறையாக கையாளத் தவறி, திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர், மாநில உளவுத்துறை தலைவர், மாநகர உளவுத்துறை பொறுப்பில் உள்ள அதிகாரி உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக இடமாற்றம் செய்து நியாயமான விசாரணை நடைபெற வழி வகுக்க வேண்டும்’, என்று குறிப்பிட்டுள்ளார்.நக்கீரன்  எம்ஜியார் ஏராளமான மலையாளிகளை போலீஸ் இலாக்காவில் சேர்த்து விட்டார் . அடிக்கடி  தமிழர்களுக்கு எதிராகவே தமிழக போலீஸ் நடந்து கொள்வதன் மர்மம் இதுதான்

கருத்துகள் இல்லை: