வெள்ளி, 27 ஜனவரி, 2017

கம்பளா போராட்டம் .. வாட்டாள் நாகராஜ் : கம்பளா போட்டியில் எருமைகள் துன்புறுத்த படுவதிலை


நாடு முழுவதும் காளை மாடுகள் மற்றும் எருமை மாடுகளை சித்ரவதை செய்வதாக பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது. இதனை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய மாணவர்கள் புரட்சி ஏற்பட்டது. இதேப்போன்று தற்போது கம்பளா என்ற எருமை மாடுகளை வைத்து சேற்றில் வீர விளையாட்டுகளை கர்நாடகா மாநிலத்தில் நடத்தப்படும். இந்த விளையாட்டுக்கும் பீட்டா அமைப்பு தடை வாங்கியது.
இது தொடர்பாக கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கம்பளா என்பது சேற்றில் எருமைகளை வைத்து விளையாடுவது அவ்வளவுதான் மற்றபடி சித்ரவதை எதுவும் நடைபெறுவது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லைவ்டே

கருத்துகள் இல்லை: