சனி, 29 அக்டோபர், 2016

ஜெ சிகிச்சைக்கு சிங்கப்பூர் ஓமி ரங்கபாஷ்யம் வருகிறார்..

அப்பல்லோவில் ஜெ.,வுக்கு சிகிச்சை அளிக்க புதிய வெளிநாட்டு டாக்டர் ஒருவர் ரகசியமாக வந்து சென்றுள்ளார். ஜெ.,வுக்கு சிச்சை அளிக்க ரிச்சர்ட் மற்றும் இரண்டு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் என மூன்று வெளிநாட்டு டாக்டர்கள் இதுவரை சிகிச்சை அளித்துள்ளனர். நான்காவதாக சிங்கப்பூரில் இருந்து ஓ.எம்.இ.ஐ. ரங்கபாஷ்யம் என்கிற ஓம்பிரகாஷ் ரங்கபாஷ்யம் என்கிற டாக்டர் சிங்கப்பூரில் இருந்து அப்பல்லோவிற்கு ஜெ.,வுக்கு சிகிச்சை அளிக்க வரவழைக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த பிரபல குடல் நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் ரங்கபாஷ்யத்தின் மகன். டாக்டர் ரங்கபாஷ்யம், முன்னாள் முதல்வர் கலைஞர், மறைந்த முரசொலி மாறன், ஆகியோருக்கு சிகிச்சை அளித்ததால் புகழ் பெற்றவர். கலைஞர் குடும்பத்திற்கு நெருக்கமான டாக்டர் ரங்கபாஷ்யத்தின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜெ.,வுக்கு சிகிச்சை அளிப்பது மருத்துவ வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லீரல் சிகிச்சை நிபுணாரான இந்த டாக்டர் இதுவரை எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாத ஜெ.,விற்கு கல்லீரல் சிகிச்சைக்காக ஏன் அழைத்து வரப்பட்டார் என மருத்துவ உலகம் ஆச்சரியப்படுகிறது. -தாமோதரன் பிரகாஷ் நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: