திங்கள், 24 அக்டோபர், 2016

வதந்தி கைதுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் .. உடனே விடுதலை செய்ய உத்தரவு

மின்னம்பலம்.காம் : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக
வதந்தி பரப்பினார்கள் என்னும் பெயரில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது, இந்தியா முழுக்க விமர்சனங்களை உருவாக்கியது. முன்னாள் நீதிபதி கட்ஜூ, மனித உரிமை ஆணையத் தலைவர் தத்து, ஆமெனெஸ்டி அமைப்பு என பல அமைப்புகளும் கண்டித்தநிலையில், டிராஃபிக் ராமசாமி இந்தக் கைதுகள் தொடர்பாகவும் அவர்மீது பதியப்பட்டுள்ள வதந்தி வழக்கு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கைது நடவடிக்கைகளை கைவிடவும், கைதானவர்களை விடுதலை செய்யவும் கோரியிருந்தார். இந்த மனு, இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வதந்தி பரப்பியோரை கைது செய்தது சரிதானா.. நிலைமையை இப்படித்தான் கட்டுப்படுத்துவீர்களா? என, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. ஆனால் அதேநேரம், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்துவிட்டது.

கருத்துகள் இல்லை: