செவ்வாய், 25 அக்டோபர், 2016

முதல்வர் மோடியின் அரைவேக்காட்டு அநியாயத்தை அமுக்கிய பிரதமர் மோடி

2005ல் KG BASINல் 20 லட்சம் கோடி கன அடி எரிவாயு இருப்பதாக கூறி அதை
எடுக்க GPSC (Gujarat State Petroleum Corporation) தொடங்கப்பட்டது. 15 பொது துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் பெற்று இந்த நிறுவனம் தொடங்கினார்கள். பத்தாண்டுகளில் ஒரு கன அடி எரியாயுவும் அங்கிருந்து எடுக்கப்படவில்லை. CAGயின் சாட்டையடி அறிக்கையின்படி GPSCயின் இன்றைய கடன் 20,000 கோடி ருபாய், அவர்களால் அதன் வருட வட்டி தொகையான ரு.2000 கோடியை கூட செலுத்த முடியவில்லை.
முதல்வர் மோடியின் தலைமையில் நடந்த இந்த மொத்த ஊதாரித்தனங்களை மூடி மறைக்க பிரதமர் மோடி இந்த நட்ட கணக்கு நிறுவனத்தை லாபம் ஈட்டும் ONGC பொதுத் துறையுடன் இணைக்க திட்டம் தீட்டு வருகிறார்,
இது தான் உண்மையான SURGICAL STRIKE..
 முகநூல் பதிவு   முத்துகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: