திங்கள், 24 அக்டோபர், 2016

மேதகு ஆளுநர் அல்ல மாண்புமிகு ஆளுநர் என்றே குறிப்பிடவேண்டும் .. ம்ம் மாண்புமிகு முதலமைச்சர் வித்தயாசாகர் என்றும் அழைக்ககூடாது

ஆளுநரை இனி "மாண்புமிகு ஆளுநர்' எனக் குறிப்பிட வேண்டும் என தமிழக
ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விழாக்கள், அரசு தொடர்பான பணிகள், பிற தகவல் தொடர்புகளில் குறிப்பிடும்போதும் தமிழக ஆளுநரை "மேதகு ஆளுநர்' எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இனி "மாண்புமிகு ஆளுநர்' என்றே குறிப்பிட வேண்டும். அதேநேரம் வெளிநாட்டு பிரமுகர்களுடனான நிகழ்வுகளில் மட்டும் "மேதகு ஆளுநர்' என்ற சொல்லை பயன்படுத்தலாம் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தினமணி,காம்

கருத்துகள் இல்லை: