இந்நிலையில், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 4 வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் 3 கன்டெய்னர் லாரிகளில் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.நேற்று காலை 9 மணிக்கு கோவையில் இருந்து இந்த லாரிகள் புறப்பட்டன. இந்த கண்டெய்னர்களுக்கு உதவி கமிஷனர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பிற்காக லாரிக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வந்தனர
இந்த கண்ட்ய்னர் லாரிகள் மதியம் 1.30 மணியளவில் உளுந்தூர்பேட்டைக்கு வந்தது. அங்கு லாரி டிரைவர்கள் மற்றும் காவல் துறையினர் சாப்பிடுவதற்கு திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே இருக்கும் தனியார் ஓட்டலில் 3 கன்டெய்னர் லாரிகளையும் நிறுத்தினர்.
;இந்த தகவல் முன்கூட்டியே விழுப்புரம் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், காவல் ஆய்வாளர் குமாரய்யா தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.<>கையில் துப்பாக்கி ஏந்தியபடி காவலர்கள் குவிக்கப்பட்டு கண்ட அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பதற்றமடைந்தனர். அதன் பின்னர் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே கன்டெயினரில் பணம் எடுத்து செல்வது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக