வெள்ளி, 15 ஜூன், 2012

ஆர்த்திராவ்தான் நித்தியின் அறையில் கேமராவைப் பொருத்தி, ரஞ்சிதாவுடனான

ஆர்த்திராவ்தான், நித்தியின் அறையில் ரகசியக் கேமராவைப் பொருத்தி, ரஞ்சிதாவுடனான நித்தியின் லீலைகளைப் பதிவு செய்தவர்

கர்நாடகாவில் நித்திக்கு எதிரான சுனாமி கிளம்பக் காரணமாக இருந்தவர் நித்தியின் முன்னாள் பெண் சீடரான ஆர்த்திராவ்.
ஏசியா நெட்டின் கன்னட சேனலான சுவர்ணா தொலைக்காட்சியில், நித்யானந்தாவின் முகத்திரையை பகிரங்கமாய் கிழித்து, கர்நாடக மாநிலத்தையே நித்திக்கு எதிராகப் பொங்க வைத்திருக்கிறார் ஆர்த்தி ராவ். நித்தி தன்னை எப்படி எப்படியெல்லாம் தன் இச்சைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர் விவரித்ததைப் பார்த்த பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர். ஆன்மீகத்தையே ஆபாசமாக்கிவிட்டாரே என ஆண்கள் கொந்தளித்தனர். இப்படி கர்நாடகாவையே அதிரவைத்த இந்த ஆர்த்திராவ்தான், நித்தியின் அறையில் ரகசியக் கேமராவைப் பொருத்தி, ரஞ்சிதாவுடனான நித்தியின் லீலைகளைப் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நித்தியின் இன்னொரு முகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்க இரண்டு மாதங் களாக முயற்சி செய்து முடியாமல் போன ஆர்த்தி ராவை நக்கீரனுக்காக நாம் சந்தித்தபோது, மளமளவென தன் மனதில் இருந்ததையெல்லாம் மடைதிறந்த வெள்ளம்போல் கொட்ட ஆரம்பித்துவிட்டார். இதோ நித்தியால் சீரழிந்த அவரது வாழ்க்கை...
‘""நான் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவள். மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிச்ச நான், மேற்படிப்பை ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவில் படிச்சேன். அங்கேயே வேலை தேடிக்கொண் டேன். அங்கு நான் காதல் திருமணமும் பண்ணிக்கொண்டேன். அமெரிக்காவில் பரபரப்பாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் என் மனம் அமைதி யைத் தேடியது. நான் இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டவள் என்ப தால், நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு 2004-ல் கர்ப்பிணியாக என் கணவர் சகிதம் வந்தேன். என்னை நித்யானந்தா அபார்ஷன் பண்ணிக்கச் சொல்லிவிட்டார் .நித்யானந்தாவிடம் நேரடியாக தியானப் பயிற்சி எடுத்துக்கொண்ட ஆனந்த ஸ்பூரணாவின் முதல் குரூப்பில் நானும் என் அப்பா ஸ்ரீதர் ராவும் இருந்தோம். நித்யானந்தா, எனக்கு ஆசிரமத்தில் முக்கியமான இடத்தைக் கொடுத்தார். அவரது பர்சனல் விவகாரங்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் ஒப்படைத்தார். இந்த நிலையில் ஒருநாள், என்னிடம் நித்தி, "குரு சிஷ்ய உறவு முறையில், ஜீவமுக்தியை அடைய ’மதுரபாவா’என்ற வழியில் இறங்கலாம். நான் கண்ணனாகவும் நீ ராதையாகவும் பாவித்துக்கொள்வோம். உன்னைத் தவிர வேறு யாரோடும் இந்த முறையைக் கையாண்டதில்லை. கையாளப்போவது மில்லை' என்றபடி, மெல்ல மெல்ல என்னை தன்வசப் படுத்தி உறவுகொண் டார். 2004-ல் இருந்து 2009 வரை என்னை தொடர்ந்து பயன் படுத்திக்கொண்டார். அவர் போகிற இடங் களுக்கும் அவரோடு செல்லும் என்னை பயன்படுத்திவந்தார்.

ஒருமுறை கும்ப மேளாவிற்குப் போன போது, அங்கு கூடா ரத்தில் ஓய்வெடுத் தோம். திடீரென என்னை அழைத்தார். ஓடிவந்த என் காலெல் லாம் ஒரே சேறாக இருந்தது. அந்த நேரத் திலும் என்னை அணுகினார். "காலெல்லாம் சேறாக இருக் கிறதே' என்று நான் தடுத்த போது, "இப்படி இருந்தாதான் பிடிக்கும்' என்றபடி என்னை வளைத்துப் பிடித்தார். அப்போது 16 வயதே ஆன ஒரு இளம்சீடர் அங்கே வர, "இங்கெல்லாம் நீ வரக்கூடாது' என அவரைத் துரத்திவிட்டுவிட்டு உறவு கொண்டார். ஆசிரமத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த லெனின் தர்மா னந்தா ஒருமுறை நித்தியோடு உள்ள உறவு பற்றி என்னிடம் கேட்டார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். அவரும் அதிர்ச்சியானார். நாளாக நாளாக ஆசிரமத்தில் நித்தியோடு பல பெண்கள் தொடர்பு எங்களுக்கு தெரிய வந்தது. இருந்தும் எனக்கு குழப்பம். ஒருநாள் நித்தியை கவனித்துக் கொள்பவரிடம் அவர் அறையில் ஒரு ரூம் பிரஷ்னெர் வைக்க அனுமதி வாங்கினேன். பின் அதில் ஒரு சீக் ரெட் கேமரா வைப் பொருத்தி னேன். அது சின்ன அசைவு தெரிந்தாலும் உயிர்பெற்று படம்பிடிக்கக் கூடிய மோஷன் ஆக்டிவேட்டட் கேமராவாகும்.

அதை அவர் ரூமில் வைத்து விட்டு இரண்டு நாள் கழித்து அந்தக் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்த நான் அதிர்ந்துபோய்விட்டேன். என்னால் அதை நம்பவே முடியவில்லை. ரஞ்சிதாவுடன் அவர் அசிங்கமாய்... ச்சே... என்னை ஏமாற்றி நாசப்படுத்தியது போலவே அவர் எல்லோரையும், ஒருவருக்குத் தெரியாமல் ஒருவராக நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டபோது என் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. உடனே அந்த கேமராப் பதிவுகளை லெனின் தர்மானந்தாவிடம் கொடுத்துவிட்டு, ஆசிரமத்தில் இருந்தால் உயிரோடு நித்தி விட்டு வைக்கமாட்டார் என்று அமெரிக்காவுக்கே போய்விட்டேன்'' என்றார் படபடப்பு மாறாதவராய்.

"கர்நாடகா சி.ஐ.டி. போலீசாரிடம் ரகசிய வாக்குமூலம் மட்டும் கொடுத்திருந்த நீங்கள் இப்போது வெளிப்படையாக பேச என்ன காரணம்?'

""என்னையும் என் குடும்பத்தினரையும் தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கிறார் நித்தி. எங்களுக்கு பல்வேறு வகையிலும் அவரது ஆட்கள் மூலம் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இவ ரால் என்ன ஆபத்துவேண்டு மானாலும் வரலாம். என் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். நித்யானந்தாவிடம் செகரட்டரியாக இருந்த மா நித்தியானந்த கோபிகா, இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. பல ரகசியங்களைத் தெரிந்து வைத்திருக்கும் அவரை உயி ரோடு விட்டுவைத்திருக்கிறார் களா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. அவர் என் னையும் இதுபோல் இல்லாமல் ஆக்கலாம். நித்தி என்ன வேண்டு மானாலும் செய்யக்கூடியவர் என்பதை புரிந்துகொண்டேன். நாளைக்கே அமெரிக்காவில் எனக்கு எதிராக அவர் ஒரு தீர்ப்பை வாங்கலாம். கர்நாடகாவில் இருக்கும் வழக்கைக் கூட டிரயலுக்கு வரவிடாமல் ஏதேதோ செய்துகொண்டே இருக்கிறார். அவர் ஜெயிக்கலாம். நான் தோற்கலாம். இல்லை அவர் என்னை சாகடிக்கலாம். எது நடந்தாலும் பரவா யில்லை.

இனி உண்மைகள் சாகக்கூடது என்பதால்தான் மீடியாக்கள் முன்பு வந்தேன்'' என்றார் கண்ணீர் பொங்க.

"நீங்கள் நித்யானந்தாவிடம் கற்றுக்கொண்ட பாடம் என்ன?' என்றோம்.

ஆர்த்தி ராவோ ""கடவுளை மட்டுமே நம்ப வேண்டும். வாழ்க்கையிலும் வார்த்தையிலும் உண்மையை வைத்திருக்கும் உண்மையான குருவை நாடவேண்டும். படாடோபமாக வலம் வரும் போலிச் சாமியார்களை, ஆடம்பரமான ஆன்மீக வேட தாரிகளை நம்பக்கூடாது. இதுதான் நான் கற்றுக்கொண்ட பாடம். மனோவசியத்தால் என்னைப் போன்ற பெண்கள் பலரும் அந்த நித்யானந்தாவிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.

தங்கள் பாதிப்புகளை வெளியே சொல்ல பயந்துபோய் அங்கேயே ஒடுங்கிப் போய்க் கிடக்கிறார்கள். எனது வார்த்தைகளைக் கேட்டு அவர்களில் ஒருவர் தப்பித்து வெளியே வந்தாலே போதும், அது உண்மைக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்'' என்று கண்ணீரோடு கைகூப்பி முடித்துக்கொண்டார்.

-நமது நிருபர்
அப்செட் ஆதீனம்!

பெங்களூரு பிடதி ஆசிரமத் தில் இருந்த மதுரை ஆதீனம் அருண கிரி அவசர அவசரமாகத் திங்களன்று மதுரைக்கு வந்தார். இந்து மக்கள் கட்சி சோலை கண்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "ஆதீனத்தில் பரிசுத்த நீர் என்ற பெயரில் போதை நீர் தெளிக்கப்படுவதாகவும், புலித்தோல்-யானைத்தந்தம் போன்ற வனவிலங்கு சட்டத்திற்கு எதிரான பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், மீனாட்சியம்மன் கோயிலைக் கைப்பற்றுவேன் என அத்துமீறி பேசியதாகவும் இதுதொடர்பாக நித்தி, ரஞ்சிதா, வைஷ்ணவி மற்றும் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக் கோரியிருந்தார். இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டதால் அப்செட்டான ஆதீனம், மடத்தில் ஏற்பாடு செய்திருந்த பூஜைகளையும் ரத்து செய்து ஆதீன வாயில்கதவுகளையே மூடிவிட்டார்.


-முகில்


கர்நாடகாவையே திகைக்க வைத்த ஆர்த்தியின் சுவர்ணா டி.வி. பேட்டிகளுக்கு பதில் கொடுப்பதற்காக நித்யானந்தா 7-ந் தேதி பிடதி ஆசிரமத்தில் பத்திரிகையாளர் களை சந்தித்தார். அப்போது ""அந்த ஆர்த்திக்கு எச்சில் மூலம் பரவக் கூடிய ஹெர்பிஸ் டூ என்கிற மோசமான பாலியல் நோய் இருக்கிறது. அதற்கு சிகிச்சை பெறு வதற்காக 2004-ல் எங்கள் ஆசிரமத்திற்கு அவர் வந்தார். ஆசிரமத்திற்கு வந்த அவரை நான் நேரில் சந்தித்ததில்லை. அவருக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவருடன் நான் தொடர்பு வைத்திருந்தால், அவரது நோய் எனக்கும் வந்திருக்காதா? வேண்டுமானால் என் ரத்தத்தை சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்'' என்றார் நித்தி.

அப்போது ஆர்த்தியின் பேட்டியை ஒளிபரப்பிய சுவர்ணா தொலைக்காட்சியின் நிருபரான அஜித், "அமெரிக்காவில் இருக்கும் இல்லினாய்ஸ் நகர நீதிமன்றத்தில், வினய் பரத்வாஜ் என்பவர் உங்கள் மீது கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக உங்களுக்கு சம்மன் கூட அனுப்பப்பட்டி ருக்கிறதே' என்றபடி சம்மனின் காப்பியை நித்தியிடம் காட்டினார். நித்தி கொந்தளிக்க, அருகில் இருந்த மதுரை ஆதீனமும் "ஒரு பத்திரிகையாளர் இப்படி சம்மனை காட்டுவது சட்டவிரோதமானது' என்று குரல்கொடுத்தார்.

இதன் பிறகு என்ன நடந்தது?

சுவர்ணா டி.வி. நிருபர் அஜித்தே விவரிக்கிறார்... "" அவரை வெளியே தூக்கிப்போடுங்கள் என்று நித்தி கூச்சல் போட்டார். ஆனந்தீஸ்வரா உள்ளிட்ட நித்தியின் சீடர்கள் என்னை சுற்றிவளைத்து, கடுமையாகத் தாக்கித் துரத்தினாங்க. பெண் சீடர்களை வைத்து என் மீது போலீசில் புகார் கொடுக்க வைத்தனர். ரவுடிகளை விடவும் மோசமா நடந்துக்கிட்டாங்க. ராம்நகர் போலீஸார், என்னைக் கைது செய்தார்கள்'' என்றார்.

பிடதி ஆசிரமத்தின் முன் திரண்ட கன்னட அமைப்பினரும் பத்திரிகையாளர்களும் நித்தியை எதிர்த்துக் கண்டனக்குரல் எழுப்பினர். நித்தி சீடர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க சிலர் காயமடைந்தனர். பதட்ட நிலை உண்டானதால் போலீஸ் அந்தப் பகுதி முழுதும் குவிக்கப்பட்டது. பிடதி ஆசிரமப் பகுதிக்கு 144 தடை உத்தரவையும் போலீஸ் பிறப்பித்தது.
கர்நாடக உள்துறை அமைச்சர் அசோக், ராம்நகர் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு நிருபர் அஜித்தை விடுவிக்கச் சொன் னார். அஜித்திடம் புகார் வாங்கப்பட்டது. இதன் அடிப்படையில் நித்தி ஆட்கள் 16 பேரை காவல்நிலையத்துக்குக் கொண்டுவந்த னர். அவர்களில் தன்னைத் தாக்கிய 8 பேரை அஜித் அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்த கர்நாடக போலீஸ் நித்தி மீதும் எஃப்.ஐ.ஆரை பதிவு செய்தது. அவரது பிடதி ஆசிரமத்திற்குள் புகுந்து அவரை போலீஸ் தேடியது.

ஆசிரமத்தில் இருந்து தப்பியோடிய நித்தி மங்கோலியா என்ற கிளப்பில் போய் புகுந்து கொண்டார். நித்தி அங்கிருப்பதைத் தெரிந்துகொண்ட ரட்சவேதிகா என்ற கன்னட அமைப்பினர், மங் கோலியா கிளப்முன் திரண்டு போய் "கர்நாடகத் தை அவமானப்படுத் தும் நித்தியே ஓடிப்போ. ஆன்மீக போலியே ஓடிப்போ' என்றெல்லாம் கோஷம் எழுப்பினர்.

அவர்கள் தன்னைத் தாக்கக்கூடும் என பயந்த நித்தி, நள்ளிரவில் கிளம்பி ஈகிள் டம்ப் என்ற ஓட்டலில் போய் பதுங்கி, பின்னர் எஸ்கேப்பாகி விட்டார்.

கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, ராம்நகர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீராமுலு, எஸ்.பி.அனுபம் அகர்வால் ஆகியோரிடம், ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்பதை விசாரித்து அறிக்கையாகத் தரும்படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய இருவரும், ஆசிரமம் என்ற பெயரில் சகல கிரிமினல் காரியங்களையும் நித்யானந்தா செய்துவருவதை அப்படியே அறிக்கையாக்கி 11-ந் தேதி காலை முதல்வர் சதானந்த கவுடாவிடம் சமர்ப்பித்தனர்.

கர்நாடக முதல்வரின் உத்தரவுப்படி நித்யா னந்தாவின் பிடதி ஆசிரமத்தை கர்நாடக காவல் துறை சுற்றி வளைத்துவிட்டது. இதை சற்றும் எதிர் பார்க்காத நித்தி தரப்பு, ரகசிய தகவல்கள் அடங் கிய கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்களை கடத்த முயன்றது. அவற்றையும் போலீஸ் மடக்கிவிட்டது. எந்த நிமிடத் திலும் நித்தி கைது செய்யப் படலாம்.

-பிரகாஷ்
thanks nakkeeran + vishnu toronto

கருத்துகள் இல்லை: