
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெகன் மோகன் ரெட்டி கூண்டோடு வெளியேறிப் போனதால் உருவாகும் வெற்றிடத்தை சிரஞ்சீவி நிரப்புவார் என்று கணக்குப் போட்டது காங்கிரஸ்.
ஆனால் அண்மையில் நடந்து முடிந்த மினி பொதுத்தேர்தலில் சிரஞ்சீவியின் செல்வாக்கை ஜெகன் சூறாவளி சூறையாடிப் போய்விட்டது.
திருப்பதி தொகுதியில் சிரஞ்சிவி போட்டியிட்டு 56,305 வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் 40,379 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். தற்போதைய இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு 96 ஆயிரத்து 684 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது காங்கிரசுக்கு 41 ஆயிரத்து 220 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இப்படி தொகுதிக்கு தொகுதி கால்குலேஷன் போட்டு கதிகலங்கிப் போய் கிடக்கிறது காங்கிரஸ்.
ஜெகன் மீது கை வைக்காமல் இருந்திருந்தாலாவது கொஞ்சம் கவுரவமாகத் தோற்றிருக்கலாமோ என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக