

இந்த நிதிக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமை கோரி வரும் நிலையில், லண்டனில் உள்ள கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் ஐதராபாத் நிஜாமின் வாரிசுகளான முகரம் ஜா (8-வது நிஜாம்), அவரது சகோதரர் முபகம் ஜா ஆகியோரும் இந்தியாவுடன் இணைந்து சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
சுமார் 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் லண்டனில் உள்ள நீதிக்கான ராயல் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியாவுக்கு சாதகமாக நீதிபதி மார்கஸ் ஸ்மித் தீர்ப்பு வழங்கினார்.
அதாவது, ‘7-வது நிஜாமுக்கு (உஸ்மான் அலி கான்) உரிமையுள்ள இந்த நிதி, அவரது வாரிசுகளான இளவரசர்கள் மற்றும் இந்தியாவுக்கு சொந்தமானதாகும். இந்த வழக்கில் பாகிஸ்தான் வைத்த வாதங்கள் தவறானவை’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
முன்னதாக இந்த நிதிக்கு உரிமை கோரிய பாகிஸ்தான், அதற்கு ஆதரவாக 2 அம்சங்களை எடுத்து வைத்தது. அதாவது பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்த நிதி அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டது எனவும், இந்த பணத்தை இந்தியாவுக்கு வெளியே வைத்திருக்கும் நோக்கில் வழங்கப்பட்டது எனவும் பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்த வாதங்களை நீதிபதி நிராகரித்தார்.
இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என நிஜாமின் வாரிசுகள் சார்பில் ஆஜராகி வந்த வக்கீல் பால் ஹெவிட் தெரிவித்தார். இந்த பணம் கைமாறப்பட்ட போது தனது கட்சிக்காரர் அதாவது 8-வது நிஜாம் சிறுவனாக இருந்ததாகவும், தற்போது 80 வயதை கடந்திருக்கும் அவரின் வாழ்நாளிலேயே தீர்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம் இந்த தீர்ப்பால் பாகிஸ்தானுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பின் முழு விவரத்தையும் ஆய்வு செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக