ஞாயிறு, 2 ஜூலை, 2017

அடாவடி ராணி நிர்மலா சீதாராமன் ! ஜெனிடிக்கல் மிஸ்டேக். ஜீன்களில் எப்போதும் இருக்கிற திமிர்.

trollmafia2 நாச்சியாள் சுகந்தி
நிர்மலா சீத்தாராமன் எப்போதும் ஒரு அதீத ஆணவத்துடனும் திமிருடனும் தான் மக்களை அணுகியிருக்கிறார். தந்தி டிவி பேட்டியில் ரங்கராஜ் பாண்டேவை நீ வாயை மூடு என்று சொல்லாத குறையாக பேசியிருப்பார். பாண்டே அங்கு கொஞ்சமடக்கித்தான் வாசித்திருப்பார். எப்போதும் முகத்தில் அடித்தற்போல் தான் பதில்சொல்கிறார்.
அவர் ஒரு அரசனின் மகளாகப் பிறந்து, அரசவைக்கு அலங்கரித்து வரும் ராணியின் மனோபாவத்திலேயே வருகிறார் என்பதை விட, எனக்கு எல்லாம் தெரியும். ஏனென்றால் நாங்கள் தான் இந்த தேசத்தை, அகண்ட பாரதத்தை ஆண்டுகொண்டு இருக்கிறோம் என்கிற இறுமாப்பு அவரிடம் நன்கு தெரியும். இந்த திமிரெல்லாம் ஒரே இரவில் வருவது அல்ல. அது ஜெனிடிக்கல் மிஸ்டேக். ஜீன்களில் எப்போதும் இருக்கிற திமிர்.
அவர் மக்களாட்சி நடப்பதாகவே நினைப்பதில்லை. அதனால் அவர் பதிலில் எப்போதும் பயங்கர அடாவடித்தனம் தெரியும். எதிரே இருப்பவனிடம் உனக்கு என்ன தெரியும் என்கிற மனோபாவம் அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரியும்.
இதற்கு முன்பு அரசியலில் இருந்த பெண் தலைவர்கள் யாரும் நிர்மலா அளவுக்கு எப்போதும் திமிருடனும்அடாவடித்தனத்துடனும் இருந்தது இல்லை. இவருடைய பேச்சு ஜெ. மம்தா எல்லாருக்கும் சவால் விடுவது போல் இருக்கிறது.

இந்த திமிர் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? மத்திய அமைச்சர் என்கிற பதவி கொடுத்தது. வலதுசாரி இயக்கும் கொடுத்த மமதை அது. இது மொத்த பாஜகவினரின் குணம் என்றாகிவிட்டது. அவர்கள் மண்டையில் இது மக்களாட்சி என்ற நினைப்பே இல்லை. இன்னுமிவர்களின் இரண்டு வருட ஆட்டத்தை வேடிக்கை பார்க்கத்தான் வேண்டும்.
ஆனால், அடுத்தமுறை தேர்தலில் இவர்கள் எல்லாம் டெபாஸிட் இழந்தால் தான் அது நமக்கு மரியாதை. நிர்மலா சீத்தாராமன்கள் அரசியலில் மட்டுமல்ல... எங்குமே ஆணவத்துடன் திரிவதை தடுக்கும் சக்தி மக்களிடம் உள்ளது.அதுமொரே ஒரு ஓட்டில் உள்ளது.

கருத்துகள் இல்லை: