புதன், 5 ஜூலை, 2017

கொடுமையான சர்வாதிகாரம்.தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கின்றது...

Damodaran: ஏமாளி தமிழ் மக்களே !....
கச்சத்தீவை தானம் கொடுத்தது.. காவேரியை பறித்துக்கொண்டது... முல்லை பெரியார்..பாலாறு...கொசஸ்தலை ஆறுகலை பாலைவனம் ஆக்குவது
அணுமின் நிலையங்கள் போன்ற உயிர் அழிப்பு தொழிற்சாலைகளை இங்கே தொடங்குவது...
மீனவர்களை சிறைபிடித்து கொடுமைப்படுத்துவது
நீட் தேர்வு...சி பி எஸ் சி பாடத்திட்டம்...போன்ற செயல்களின் ...
நோக்கம் என்ன ? அதன் பின்புல இரகசியம் என்ன ? ஒரே ஒரு நோக்கம் தான்.. தமிழர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடித்துவிட்டு...
தமிழ் நாட்டின் காடுகள்..மண்ணுக்கடியில் உள்ள விலை மதிப்பற்ற பலப்பல கனிமங்கள் முதலான இயற்கை செல்வங்களை...
அம்பானி அதானி போன்றோருக்கும் அந்நிய நாட்டு கார்போரேட்டுகளுக்கும் விற்று பல கோடி கோடிபணத்தை அள்ளுவதே பாஜக அரசின் நோக்கம் ...
அதோடு தமிழர்களை நிலமற்ற ஏழை கூலித்தொழிலாகளாக்கி ...
படிக்கவும் விடாமல் அடிமைப்படுத்துவது ... அவர்களது மொழி இன அடையாளங்களை அழிப்பது ஒன்றே மத்திய அரசின் நோக்கம்..
வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து வாழலாம்...
ஏழை தமிழர்கள் இந்தியாவில் கடைநிலை கொத்தடிமைகளாக காலம் தள்ளலாம்.


இன்னும் பத்தாண்டுகளில் தமிழன் உரிமைகளை இழந்து சொந்தமண்ணிலேயே கூலிகளாக பிச்சைக்கார்களாக அலைவார்கள்.
தமிழ்நாடு காணாமல் போய்விடும். இந்தியர்களின் வேட்டைக்களமாகிவிடும்.
இந்திய பேரரசின் கொடுமையான சர்வாதிகாரம்.தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கின்றது...
தமிழன் எப்போதும் விழிக்கவே மாட்டானா ?

கருத்துகள் இல்லை: