கருப்புப் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அரசுக்குத் தெரிய வரும்போது கருப்ப பணத்தை ஒழிக்கும் வகையில் புதிய திட்டங்களை வகுக்க முடியும்.
இந்தியாவில் கருப்புப் பணம் வெறும் பணமாக மட்டுமில்லை, தங்கமாக அதிகளவில் புதைந்துகிடக்கிறது. மேலும் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற மக்களிடத்தில் பல வழிகள் உண்டு,
இதில் எளிமையான வழி கோவில் உண்டியலில் பணத்தைப் போடுவது. கருப்புப் பணத்தை ஒரு நாட்டில் இருந்து முழுமையாக ஒழிப்பது என்பது எளிமையாகச் செயல் இல்லை.
;என்னுடைய கணிப்பின் படி கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு அதிகளவிலான சலுகையை அளிக்க வேண்டும், குறிப்பாக வரி விதிப்பில். இவ்வாறு சலுகைகளை அளிப்பதன் மூலம் அதிகளவிலான கருப்புப் பணம் கணக்கில் வரும்.
என்னுடைய ஆய்வில் இந்தியாவில் மிகவும் குறைவான வரி விதிப்பு மட்டுமே உள்ளது. தற்போதைய நிலையில் அதிக வருமானம் பெறுவோருக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வட்டி விகிதம் 33 சதவீதம், அமெக்காவில் 39 சதவீதம் மற்றும் மாநில வரிகளுடன் கிட்டத்தட்ட 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
;இந்தியாவில்
குறைந்த அளவிலான வரியை மட்டுமே விதிக்கப்படும் நிலையில் கருப்புப் பணம்
சேர்க்க வேண்டும் என்ற காரணம் இந்தியர்களிடம் இருக்க வேண்டியது
அவசியமில்லை.
ஆயினும்
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கருப்புப் பணத்தில் அளவு தொடர்ந்து
அதிகரித்து வருவதினால் சரியான தகவல்களைக் கொண்டு முறையான வரி மற்றும்
சலுகையை அறிவித்தாலே போது கருப்புப் பணத்தை எளிமையாகக் குறைக்க முடியும்
என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார். tamiloneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக