சனி, 26 நவம்பர், 2016

மே.வங்கத்தில் பாஜகவினர் மீது மக்கள் தாக்குதல் .. முன்கூட்டியே இரகசியம் தெரிந்து ரூபாய் மாற்றம் செய்தனர்?


ரகசியம் காக்கப்பட வேண்டிய இந்த அறிவிப்பு எப்படி பிஜேபியின் முக்கியஸ்தர்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் முன்கூட்டித் தெரிவிக்கப்பட்டது, அவர்களின் கறுப்புப்பணத்தை மீட்பதற்கும் அவகாசம் எப்படி அளிக்கப்பட்டது” என்றுதான் முக்கிய எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி கோபம் கொள்கின்றன. அதுகுறித்து ஆராய Joint Parliamentary Committee அமைக்கப்பட வேண்டும் என்றுதான் கோரிக்கை வைக்கின்றன.
இதை அப்படியே உல்டாவாக மாற்றி, “ரகசியம் காத்து இந்த அறிவிப்பை வெளியிட்டதும், தங்கள் ஆட்களின் வசம் இருக்கும் கறுப்புப்பணத்தை மாற்றுவதற்கு அவகாசம் கொடுக்கவில்லை என்பதுமே எதிர்க்கட்சிகளின் கோபமாக இருக்கிறது” என மோடி புரட்டிப் பேசுகிறார்.
வெட்கங்கட்ட ஊடகங்கள் ‘பிரதமர் எதிர்க்கட்சிகளை திருப்பி அடிக்கிறார்’ என்றும் ‘எதிர்க்கட்சிகளை பிரதமர் தோலுரிக்கிறார்” என்றும் சிலாகிக்கின்றன.
படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான் போவான் ஐயோ என்று போவான்! முகநூல் பதிவு . முத்துகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: