செவ்வாய், 22 நவம்பர், 2016

தஞ்சையில் இனி பாலும் தேனும் ஓடும் ..

தஞ்சை மக்கள் ஜெயாவிற்கு வாக்களித்துள்ளார்கள்...
பணம் கொடுத்தார்கள் என்பது ஒரு காரணமாக சொல்லாதீர்கள்
வறண்டு போன காவேரி....பொய்த்துப்போன மூன்றுபோக சாகுபடி...செத்துப்போன விவசாயம்.....அன்றாடம் செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகள்...வற்றிப்போன நிலத்தடி நீர்...குடிநீர் பஞ்சம்...இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் ....மக்கள் அவற்றைப்பற்றி துளிகூட சிந்திக்கவே இல்லை...கவலைப்படவும் இல்லை.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடந்த போராட்டங்களில்.....திமுகவினருக்கு சில விவசாய சங்கத்தின் பொறுப்பாளர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்...பொதுமக்களில் யாரும் கலந்துகொள்ளவில்லை ...அந்த போராட்டங்களை திமுகவின் தேவையற்ற போராட்டமாகத்தான் நினைத்துக்கொண்டார்களோ என்னவோ ?
தஞ்சை மக்கள் விரும்பியபடி...ஜெய வென்றுவிட்டார்...தஞ்சை மக்களுக்கு இனி பாலும் தேனும் ஆறாக ஓடும் என்று நம்புவோம்.
தஞ்சை மக்கள் விதைத்ததை அறுவடை செய்யட்டும்...
இனி காவேரி...விவசாயம்...வெங்காயம் என்றும் யாரும் கூப்பாடு போடவேண்டாம்.எல்லாம் சரியாகிவிட்டது...போங்க போயி உங்க ஜோலியை பாருங்க முகநூல் பதிவு சென்னை தாமோதரன்

கருத்துகள் இல்லை: