சனி, 26 நவம்பர், 2016

கேரளா :போலீசால் படு கொலை செய்யப்பட்ட தேவராஜன் ,அஜிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்கள் கைது !

கேரள போலீஸால் படுகொலை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் செயல்பாட்டாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இவர்கள் தேவராஜன், அஜிதா என தகவல் வெளியானது. இவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் அ. மார்க்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் அ. மார்க்ஸின் பதிவு…
“கோழிக்கோடு மருத்துவமனை மார்ச்சுவரியில் போஸ்ட்மார்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள தோழர்களின் உடலுக்கு மரியாதை செய்யச் சென்ற 28 பேர்களை கேரள போலீஸ் கைது செய்தது. இப்படியான அச்சுறுத்தல் முதலியவற்றைக் கண்ட தோழர் அஜிதாவின் சிறிய தந்தை உடலை அடையாளம் காட்டாமலேயே செல்ல நேரிட்டது. கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலோர் NCHRO வினர். சுமார் 12 மணி வாக்கில் தோழர் ராமுண்ணி தவிர மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். என்கவுண்டரையும் தொடர்ந்த போலீஸ் அத்துமீறல்களையும் கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு NCHRO சார்பாக கோழிக்கோட்டில் ப்ரெஸ் மீட் வைத்துள்ளோம்”.  thetimestamil.com

கருத்துகள் இல்லை: