வியாழன், 24 நவம்பர், 2016

மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் கட்டுரைக்கு பதில் சொல்வாரா எழுத்தாளர் ஜெயமோகன்?

எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் மிக மெதுவாக பணிபுரியும் வங்கி ஊழியர் ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்து, ஒரு பதிவை எழுதியிருந்தார். அந்தப் பணியாளர் குறித்த அவதூறான பதிவுக்கு சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்தது. எழுத்தாளர் ஜெயமோகன அந்தப் பதிவை நீக்கி மன்னிப்புக் கேட்டார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் இத்தகைய அவதூறு எழுத்துகளுக்கு பின்னணியில் இருக்கும் மனநிலையை விவரித்து மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார்.
இந்தக் கட்டுரை மீது சமூக ஊடகங்களில் விவாதங்கள் நிகழ்ந்தன. இந்த விவாதங்களின் தொகுப்பு இங்கே:
எழுத்தாளர், விமர்சகர் ராஜன் குறை கிருஷ்ணன்: 
வெறுப்பிற்கும், கோபத்திற்கும், கண்டனத்திற்கும் வேறுபாடு புரியாமல் யார் யாரை காரணங்களுடன் கண்டித்தாலும் “வெறுக்கிறீர்கள்” என்று கூறுவிடுகிறார்கள். நான் கடவுள் படத்தில் ஜெயமோகன் மிகவும் அழுத்தமாக தனது nazi கருத்தை கூறியுள்ளார் : நான் கொடுக்கும் மரணம் சிலருக்கு தண்டனை சிலருக்கு விடுதலை . நடிகை பூஜாவின் பாத்திரத்தை ஆர்யா கழுத்தில் கடித்து அவளுக்கு கொடுத்த விடுதலைன்னு பறஞ்சவந்தான் இந்த ஜெயமோகன் என்கின்றவன் இவனுக்கு கூட்டாளி மனநோய் பாலா ..
மெள்ள பணத்தை எண்ணுகிறார் என்ற அடிப்படையை மட்டும் வைத்துக்கொண்டு “கிழவி” “கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும்” என்று எழுதுவது அந்த பெயர் தெரியாத நபரின் மீதான வெறுப்பல்ல. வெறும் கோபமும் அல்ல. திறமையற்றவர்கள் மீதான நவீன உலகின் வெறுப்பு. இதற்கு மன்னிப்பு கேட்டபோதுகூட ஜெயமோகன் தான் சாதாரண குடிமகனைப் போல உணர்ச்சி வசப்பட்டதாகத்தான் சொன்னார். இப்படி சாதாரணக் குடிமகன்களின் உணர்ச்சியின் மீது கட்டமைக்கப்பட்டதுதான் பாசிசம் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. ஜெயமோகன் தீவிரமான ஒரு சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும். இதெல்லாம் விளையாட்டான விஷயமல்ல. விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. மூச்சுக்கு மூச்சு நான் எழுத்தாளன் சமூகத்தின் ஆன்மா என்று கூறுபவர் சாதாரண மனிதர்களைப் போல எதையும் எழுதக்கூடாது. கட்டுரை எழுதிய அரவிந்தன் சிவகுமார் “நான் கடவுள்” படம் பார்க்கவில்லை என நினைக்கிறேன். விபரீதமான அர்த்த தளங்களை உள்ளடக்கிய படம் அது. தத்துவார்த்த தளத்திற்கு கருணைக்கொலையை நகர்த்துவது.
மொழிபெயர்ப்பாளர் குப்புசாமி கணேசன்:
ஜெயமோகனின் மனவிகாரங்களை இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் விளக்கியதில்லை. அரவிந்தன் சிவகுமாரின் கட்டுரைக்கு ஜெயமோகன் பதில் எழுதினால், தன்னை மேலும் தெளிவாக வெளிப்படுத்திக்கொள்வார். சிலருக்கு கொஞ்சம் போல இருக்கும் சந்தேகங்களும் அப்போது தீர்ந்துவிடும்.
பொன் கந்தசாமி:
சாதாரண மனிதர்களின் உணர்ச்சியின் மீது கட்டமைக்கப்பட்ட துதான் பாசிசம் . அருமை. அமெரிக்க ட்ரம்ப் வரை
Sundara Raj:
Dr.அரவிந்தன் சிவகுமார் அவர்களுக்கு முதலில் என் நன்றி . இக்கட்டுரையை படித்த பின்னர்தான் ஜெயமோகனின் ஆழ்மனதில் இருக்கும் ஈவு இரக்கமற்ற பாஸிஸ மனித நிலையின் முழு வீரியத்தை உணரும்போது மனம் நடுங்குகிறது.
இதுபோன்ற கருத்தியல் கொண்டவர்கள் மனித குலத்திற்கு பெரும் பேரழிவை செய்பவர்களுக்கு தார்மீக நியாயம் கொடுக்கும் ஆன்மாக்கள் .
ஒரு மன நிலை பிறழ்ந்த நோயளியையும்விட ஆபத்தானது . ராஜன் குறை சுட்டிக்காட்டியது போல் நான் கடவுள் படத்தின் முடிவுவோடு இணைத்து பார்த்தால் ஜெமோ முன் வைக்கும் பாஸிஸ அரசியலின் நோக்கம் தெளிவாக புரியும். நான் தான் கடவுள் என்று சொல்பவர்கள் கடவுளைவிட ஆபத்தானவர்கள் போல.
நாடகக் கலைஞர் ப்ரீதம் சக்ரவர்த்தி: 
The moment when Arya states his mother is ‘thoomam’ was enough to know what Jayamohan thinks of women in general.
எழுத்தாளர் அம்பை:
இந்தத் தருணத்திற்கான மிக முக்கியமான கட்டுரை. எழுதியவர் மன நல மருத்துவர் என்பதும் தமிழில் எழுதியிருப்பதும் கூடுதல் முக்கியத்துவம்.
Those who have read Pin Thodarum… novel of his would have known his view of women in any case. He says every profession has a way to relax like the army has access to liquor and so on. He says for women the relaxation is prostitution. At another part of the novel he says a single woman looks like the mother who offers milk from her breasts and a group of women look like bandicoots.
jayaseelan.ganapathy:
நான் மிகவும் ரசித்த எழுத்து கலைஞன். ஆனால் அவரது தளத்தில் கருப்புப்பண விவகாரம் குறித்த கட்டுரையை படித்து என் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. விஜய் மல்லையா குறித்த அவரது கருத்து எனக்கு அவர் மீதிருந்த அபிப்ராயத்தை மாற்றியது, வருந்துகிறேன்.
எழுத்தாளர் வாசுதேவன்:
அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை… இந்த செல்லாத நோட்டு பஜனைக்கும், ஜெயமோகனின் உளவியல் பின்ணனியையும் கூர்மையாக எழுதியுள்ளார். ஒரு வக்கிரம் விகாரமான மனிதர் மட்டுமே இப்படி எழுதமுடியும். ஜெ.மோகன் அபுனைவில் இப்படி வக்கிரமாக மட்டும் எழுதவில்லை. அவருடைய புனைவிலும் லட்சியவாதத்தை முன்வைத்து பெண்கள், இடதுசாரிகளை மிகக்கேவலமாக எழுதியுள்ளார். வக்கிர மனநிலையில் ஜெ,மோகன் எழுதிய சில குரூர அவதூறுகள்..
-குருவி மண்டை அருந்ததி ராய்
– குடிகாரன் ஜான் அஃப்ரஹாம்
– பாரதி மகாகவியே இல்லை
_ குரூபி கமலாதாஸ்
இதைத்தவிர தமிழில் எழுதுபவர்களை மேல் அபாண்டமான குற்றச்சாட்டுகள், பெண்களை இழிவுப்படுத்தி எழுதியது என இந்தப்பட்டியல் நெடியது.
ஆக இந்த உலகில் யார் வாழவேண்டும், யாரை துன்படுத்தவேண்டும், எவரை வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்பது cleansing (தூய்மைபடுத்தும்) முன்னோக்கிய திட்டம்தான் இவர் எழுத்துகள். அதனால்தான் இவரால் மல்லையாவை ஆதரிக்க முடிகிறது. நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களை பற்றி கள்ள மவுனம் சாதிக்கிறார்.

கருத்துகள் இல்லை: