சனி, 18 அக்டோபர், 2014

டக்கர் படத்தில் மீனாட்சி தீட்சித் அருந்ததி பிரேம்ஜி

சென்னை: காமெடி திரில்லர் கதையாக உருவாகிறது ‘டக்கர். இதுபற்றி இயக்குனர் பரணி ஜெயபால் கூறியது: ஏற்கனவே ‘மதில் மேல் பூனை படத்தை இயக்கினேன். அடுத்து விஞ்ஞான ஆராய்ச்சியுடன் காமெடி, ஆக்ஷன், திரில் கலந்த கதையாக ‘டக்கர் ஸ்கிரிப்ட் உருவாகி இருக்கிறது. இதில் கார் ஓட்டும் வீரராக பிரேம்ஜி நடிப்பதுடன் இசை அமைக்கிறார். மீனாட்சி தீட்சித், அருந்ததி ஹீரோயின்களாக நடிக்கின்றனர். விடிவி கணேஷ், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, கங்கை அமரன், வெங்கட்பிரபு, ‘பாண்டியநாடு வில்லன் சரத் நடிக்கின்றனர். எஸ்.யுவராஜ், கார்த்திகேயன் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பெங்களூர் மற்றும் அந்தமான் காடுகளில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். - tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: