
சென்னையில் ஆரம்பிக்க நினைத்த AVM Studios மின்சாரத் தேவை காரணமாக காரைக்குடியில் இயங்க ஆரம்பித்தது.
முதலில் ‘நாம் இருவர்’ படத்தை 14.01.1947-ல் வெளியிட்டது. பாரதியார் பாடல்கள் காட்சிகளாக எடுக்கப்பட்ட படம் இது. இதற்காக பாரதியார் பாடல்களின் உரிமையைப் பெற்று பின் நாட்டுடமையாக்கப்பட்டது வரலாறு. 1948-ல் ‘வேதாள உலகம்’ படத்தை வெளியிட்டவுடன் Studios-ஐ சென்னைக்கு மாற்றினார்கள்.

அன்னை,
நானும் ஒரு பெண், குழந்தையும் தெய்வமும், ராமு போன்ற படங்கள் சிறந்த
படத்திற்கான வெற்றிப்பதக்கத்தை பெற்றது. பக்த பிரகலாதா தமிழ், தெலுங்கு,
கன்னடம், இந்தி மொழிகளில் எடுக்கப்பட்ட படம். சிவாஜியின் 125-வது படமான
உயர்ந்த மனிதன் P.சுசிலாவிற்கு(பால் போலவே) சிறந்த பாடகிக்கான தேசிய
விருதையும், சிறந்த படத்திற்கான தமிழ்நாடு அரசு விருதும் பெற்றது.
சம்சாரம்
அது மின்சாரம் படம் சிறந்த ஜனரஞ்சக படத்திற்கான மத்திய அரசின் தங்கப்
பதக்கத்தை பெற்றது. மின்சாரக் கனவு திரைப்படம் சிறந்த நடனம்(பிரபுதேவா),
சிறந்த பின்னணி பாடகர்-பாடகி (SPB- சித்ரா) என பல விருதுகளை பெற்றது.
இப்படி தேசிய விருது பெற்ற படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.
தொழில்நுட்பத்தில்
பின்னணி பாடுவது, பின்னணிக்குரல் பதிவு போன்றவற்றை திரையுலகில்
அறிமுகப்படுத்தியதே ஏ.வி.எம் தான். 1937-ல் பின்னணி பாடும் முறை
நாந்தகுமாரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரபல பாடகி லலிதா வெங்கட்ராமன்
பின்னணி பாடியிருக்கிறார். 1938-ல் ஹரிசாந்திரா என்ற கன்னடப் படம் தமிழில்
மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் டப்பிங் படமாகும்.
டப்பிங் முறை, மின்னணி பாடும் முறை ஆகியவற்றை இந்திய சினிமாவிற்கே
அறிமுகப்படுத்தியது ஏவிஎம் தான் என்பது உண்மை.
நடிகர்
திலகம் சிவாஜி கணேசன், S.S.ராஜேந்திரன், T.R.மகாலிங்கம், கமலஹாசன்,
சிவகுமார், நாகேஷ்வர ராவ், வி.கே.ராமசாமி, விஜயகுமாரி, பண்டரி பாய்,
வைஜெயந்திமாலா உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்களையும், A.T.கிருஷ்ணசாம்மி,
எம்.வி.ராமன், ப.நீலகண்டன், k..ஷங்கர், எஸ்.பி.முத்துராமன், இராமநாராயணன்,
உள்ளிட்ட இயக்குனர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை ஏ.வி.எம்-ற்கு உண்டு.
சிவாஜி
நடித்தார். அவர் மகன் பிரபு நடித்தார். சிவக்குமார் நடித்தார். அவரது மகன்
சூர்யா நடித்தார். குமாரி ருக்மணி நடித்தார். அவரது மகள் லட்சுமி, அவர்
மகள் ஐஸ்வர்யா என இப்படி தலைமுறைகளைத் தாண்டி நடிக்க வைத்த நிறுவனம்
ஏ.வி.எம்.
ஏ.வி.எம்-ன்
தொண்டினை பாராட்டி மத்திய அரசு 2006-ல் தபால் தலையை வெளியிட்டது.
தென்னிந்திய வர்த்தகசபை ஏ.வி.எம்.மின் சிலையை தங்கள் வளாகத்தில் திறந்து
வைத்து பாராட்டினர். இத்தனை சிறப்புகளோடு ஏ.வி.எம் நிறுவனம் 70-வது
ஆண்டிலும் தன் கலை உலக பயணத்தை நான்காம் தலைமுறையுடன் தொடர்கிறது.
பழைய படங்களின் கேலரி :
nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக