ஞாயிறு, 1 ஜூன், 2014

அதிமுக பிரமுகரால் விபசாரத்தில் தள்ளப்பட்ட மேற்கு வங்க சிறுமி மீட்பு !

குமாரபாளையத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 16 வயது அவரது தந்தை இறந்து விட்டதால், போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால், பெங்களூரில் உள்ள சிறுமியின் உறவினர்கள், தமிழ்நாட்டில் வீட்டு வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி, ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூர் அழைத்து வந்துள்ளனர். அங்கு அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். பின்னர் ஈரோட்டை சேர்ந்த புரோக்கருக்கு அந்த சிறுமி விற்கப்பட்டுள்ளார். அந்த புரோக்கர், மோகன்ராஜிடம், தினம் 3 ஆயிரம் ரூபாய் ரேட் பேசி அனுப்பி வைத்துள்ளார். கடந்த 27ம் தேதி குமாரபாளையம் மோகன்ராஜ் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி, தொடர்ந்து இரண்டு நாட்கள் அங்கே அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். இரண்டு நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் அந்த சிறுமியை சீரழித்துள்ளனர். இதில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் உள்ளதாக தெரிகிறது.


இந்த விவகாரத்தை போலீசார் விசாரிப்பதை தெரிந்து கொண்ட முக்கிய புள்ளிகள், இந்த வழக்கை மூடி மறைக்க, போலீசாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.  இதையடுத்து, பெங்களூரில் உள்ள சிறுமியின் உறவினர், அவரது மனைவி, ஈரோடு பாலியல் புரோக்கர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குமாரபாளையம் பிரமுகர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் போலீசார் மறைத்து அனைவரையும் தப்பிக்க விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நாமக்கல் எஸ்.பி செந்தில்குமாரிடம் கேட்டபோது, இதில் தொடர்புடையவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்போம் என்றார். dinakaran.com

சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியின் 12வது வார்டு அதிமுக செயலாளர் மோகன்ராஜ். இவரது மனைவி ஜெயந்தி. இவர்கள், சாணார்பாளையம் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி, இவர்களது வீட்டில் கொல்கத்தாவை சேர்ந்த 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மோகன்ராஜையும், அவரது மனைவி ஜெயந்தியையும் குமாரபாளையம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீட்கப்பட்ட சிறுமி, சேலத்தில் மெய்யனூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அந்த சிறுமியிடம் குழந்தைகள் நல அமைப்பினர் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்த தகவல்கள் வெளியாகின. மீட்கப்பட்ட சிறுமியின் தாய் கொல்கத்தாவில் உள்ளார்.dinakaran.com

கருத்துகள் இல்லை: