புதன், 3 ஜூலை, 2013

New dellhi : 7ம் வகுப்பு மாணவியை நண்பனின் வீட்டில் அடைத்து வைத்து 4 நாட்களாக கற்பழிப்பு

7ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று 4 நாட்களாக நண்பனின் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த வாலிபனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கிழக்கு டெல்லியில் உள்ள கல்யாண்புரி பகுதியில் வசிக்கும் ஒருவர், 7ம் வகுப்பில் படித்து வந்த தனது 16 வயது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மாணவியின் வீட்டின் அருகில் வசிக்கும் சந்தன் (24) என்பவன் மீது தங்களுக்கு சந்தேகமாக இருப்பதாக பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், அவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நண்பனின் வீட்டில் மாணவியை அடைத்து வைத்திருப்பதாக கூறினான். விரைந்து சென்ற போலீசார் அந்த வீட்டில் இருந்த மாணவியை மீட்டு, சந்தன் மற்றும் அவனது நண்பன் பிரமோத் அகியோரை கைது செய்தனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த மாணவி, பிரமோத்தின் வீட்டில் 4 நாட்களாக அடைத்து வைத்த சந்தன் பலமுறை தன்னை கற்பழித்ததாகவும், விபசார தரகர்களிடம் விற்பதற்காக பேரம் பேசியதாகவும் கூறினார். கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: