வெள்ளி, 5 ஜூலை, 2013

திருமாவளவன் : இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்

புதுச்சேரி: இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக எனக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி வந்திருந்த திருமாவளவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இளவரசன் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நீதி விசாரணை தேவை. அந்த நீதிபதி சாதிசார்பற்றவராக பணியில் உள்ளவராக இருத்தல் வேண்டும். காரணம், இளவரசனின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பகத்தனமான தகவல் கிடைத்துள்ளது. எங்களுக்கு தமிழக அரசு மீது நம்பிக்கை உள்ளது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை. நேர்மையான விசாரணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் திருமாவளவன்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: