சனி, 6 ஜூலை, 2013

சமூக நீதிப் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் சாதி வெறி ! கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா. பாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இளவரன் மரணம், என்.எல்.சி., விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து 06.07.2013 சனிக்கிழமை காலை செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, தருமபுரி திவ்யா - இளவரசன் சாதி மறுப்பு காதல் திருமணம் சாதி வெறியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டுள்ளது. திவ்யாவின் தந்தை தற்கொலைக்குப் பிறகு இப்போது இளவரசனின் மரணமும் நிகழ்ந்திருக்கிறது. மூன்று தலித் கிராமங்கள் சூறையாடப்பட்டன. சமூக நீதிப் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இந்தக் கொடூரம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாகும்.தமிழக ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் இத்தகைய சாதி வெறி மற்றும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக வலுவாக போராட முன்வர வேண்டும் என்றும் சாதி வெறி சக்திகளை தமிழகம் புறக்கணிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். இளவரசன் மரணம் குறித்து நியாயமான துரிதமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென இரண்டு கட்சிகளும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்றனர்.

கருத்துகள் இல்லை: