ஞாயிறு, 30 ஜூன், 2013

மோடி : வாக்களிப்பை அரசு கட்டாயமாக்கி உள்ளது ! அடுத்து RSS கொள்கைகளையும் கட்டாயமாக்குவீரோ ?

குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல்
மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:- எனது தலைமையிலான குஜராத் அரசு வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை வாக்காளர்கள் திரும்பப் பெறவும் முடியும். நல்லவர்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கு இதைப்போன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானதாகும். தற்போதைய நிலையில், ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட தகுதியை கருத்தில் கொள்ளாமல் கட்சியை மட்டும் மனதில் வைத்து மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களை திரும்பப்பெறும் உரிமையும் மக்களுக்கு அளிக்கப்பட்டால் எல்லா மக்கள் பிரதிநிதிகளையும் அவர்கள் வெளியேற்றி விடுவார்கள். இதற்கு பயந்தாவது, அரசியல் கட்சிகள் நல்ல வேட்பாளர்களுக்கு சீட் வழங்கும் நிலைக்கு தள்ளப்படும். இதன் மூலம் நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள். இந்திய ஜனநாயகம் மேலும் முன்னேறும் என்ற நோக்கத்தில் இந்த புதிய சட்டத்தை எனது அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக குஜராத் கவர்னர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: