வெள்ளி, 5 ஜூலை, 2013

மகளை விபசாரத்தில் தள்ளிய தந்தைக்கு 7 ஆண்டு ஜெயில்


கொச்சி அருகே பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதீர். கூலித்தொழிலாளி. இவருக்கு கூலித்தொழில் மூலம் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் புரோக்கர் லில்லி என்பவர் சுதீரை அணுகி ஆசை வார்த்தைகளை கூறினார். அவரது மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தினால் நிறைய பணம் கிடைக்கும். அதற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார். பணத்திற்காக பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்த சுதீர் துணிந்தார். அதன்படி அந்த பகுதியைச் சேர்ந்த மர வியாபாரியான வீரான் (வயது 65) என்பவரிடம் தனது மகளை அனுப்பி வைத்தார். இதற்காக சுதீருக்கு ரூ.20 ஆயிரம் பணத்தை புரோக்கர் லில்லி வாங்கிக் கொடுத்தார். இதற்கு பரிசாக லில்லிக்கு வீரான் கார் வழங்கினா
இதன் பிறகு அந்த இளம் பெண்ணை ஒரு மாதம் தனது வீட்டில் அடைத்து வைத்து வீரான் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த கொடுமையில் இருந்து தப்பி வந்த அந்த பெண் கொச்சி போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து சுதீர், லில்லி, வீரான் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


இந்த வழக்கு கொச்சி கோர்ட்டில் நடந்து வந்தது. தற்போது நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி சுதீருக்கும், லில்லிக்கும் 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், வீரானுக்கு 10 வருடம் ஜெயில் தண்டனை, ரூ.1 1/2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: