
புத்தக வெளியீட்டு விழா மதுரை கீற்று பதிப்பகத்தார் சார்பாக
இளையான்குடியில் நடைபெற்றது.தமுமுக தலைவர் போராசியியர் ஜவாஹிருல்லா
புத்தகத்தை வெளியிட, மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக்கொண்டார். .இந்தப்
புத்தகத்திற்கு திராவிட கழக தலைவர் கி;.வீரமனி, மதுரை ஆதினம், பேராசிரியர்
ஜவாஹிருல்லாஹ் மற்றும் நக்கீரன் வாரஇதழ் ஆசிரியர் கோபால் ஆகியோர் பாராட்டி
அணிந்துரை வழங்கியிருந்தனர்.சமீபத்தில் இந்தப் புத்தகம் தமிழக முன்னாள்
முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. .
இதனை படித்து விட்டு கருணாநிதி, பேராசிரியர் ஆபிதீனை நேரில் அழைத்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் அண்ணா அறிவாலயம் சென்ற ஆபிதீன், கருணாநிதியை
நேரில் சந்தித்தார்.
அங்கு ஆபிதீனின் புத்தகம் குறித்த விவரங்களைக் கேட்டறிந்த கருணாநிதி, பல
விளக்கங்களையும், அறிவுரைகளையும் கூறினார்.தான் முதல்வராக இருக்கும் பொழுதே
இந்தப் புத்தகம் தனது கவனத்திற்கு வந்துவிட்டதாக கூறிய கருணாநிதி, சில
மாறுதல்களுடன் அந்த புத்தகத்தை மறுபதிப்பாக வெளியிடும் பொழுது
அந்தப்புத்தகத்திற்கு வாழ்த்துரையும் தருவதாக கூறினார்.
சுமார் 8 நிமிட சந்திப்பிற்குப் பிறகு கடைசியாக விடைபெறும் பொழுது, இன்னும்
பல புத்தகங்கள் தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள் என்று பேராசிரியர்
ஆபிதீனை பாராட்டி அனுப்பினார் கருணாநிதி.
இது குறித்து பேராசிரியர் ஆபிதீன் கூறும் பொழுது, டாக்டர் கலைஞர் அவர்கள்
இந்த வயதிலும், கடுமையான வேலைப்பளுவிற்கு இடையேயும் தனது புத்தகத்தைப்
படித்து ஆலோசனையும் அறிவுரையும் வழங்கிய விதம் மிகவும் ஆச்சரியமாகவும்
சந்தோசமாவும் இருந்தது என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக