செவ்வாய், 2 ஜூலை, 2013

வடிவேலு டைரக்ட் பண்ண போகிறாராம் ! அடுத்த பாக்கியராஜ் வருகிறார் பராக் !

ஆகா ஓகோ என்று மீடியாக்களுக்கு செய்தி கொடுக்கப்பட்டு தொடங்கப்பட்ட
வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படம் ஆல்மோஸ்ட் ட்ராப்ட் என்று செய்தி அடிபடுவது படத்துக்கு நெகட்டிவ் இமேஜை கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டுள்ள தயாரிப்பு நிறுவனம், அதை மாற்ற படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.
தயாரிப்பு நிறுவனத்துக்கு வேண்டியதெல்லாம், வைகைப் புயலும், டைரக்டர் யுவராஜும் சிரித்துப் பேசியபடி ஒரு நாளாவது ஷூட்டிங் நடத்த வேண்டும். அதன் போட்டோக்களை எடுத்து மீடியாவில் கொடுத்து ‘பட வேலைகள் ஷோராக தொடங்கிருச்சு’ என்று காட்டணும்.

ஆனால், வைகைப்புயல் கோபித்துக் கொண்டு மதுரைக்கு போய்விட்டார். டைரக்டரை கேட்டால் பெரிய கும்பிடாக போடுகிறார்.
வடிவேலு கோபித்துக்கொண்டு மதுரைக்கு போகுமுன், படத்துக்கு அடுத்தடுத்து பணியாற்ற வந்த மூன்று கேமராமேன்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டார்கள்.
இன்றைய தேதியில் யூனிட்டில் இருந்து ஓடாத ஒரே ஆத்மா, தயாரிப்பாளர்தான். கோடிக்கணக்கில் போட்டிருக்கிறார் அல்லவா?
பானைக்குள் தலையை விட்டாச்சு, பானையை உடைத்தாவது தலையை வெளியே எடுக்க வேண்டும் என்ற நிலையில் தயாரிப்பாளருக்கு புதிய ஐடியா ஒன்று ஏற்பட்டுள்ளதாம். அது என்ன?
பானைக்குள் பூனையை விடுவது!
முன்பு ஷூட்டிங் நடந்தபோது, செட்டில் வடிவேலுவே காட்சி வைத்ததும், கேமரா கோணம் சொன்னதுமாக கிட்டத்தட்ட டைரக்டர் ரேஞ்சில் சுழன்றதுதான் பலரும் தெறித்து ஓடியதன் காரணம் என்பதால், “அண்ணே.. பேசாம நீங்களே டைரக்ட் பண்ணி படத்தை முடிச்சு கொடுங்க” என்று கேட்பதுதான், அந்த ஐடியாவாம்!
பீட்சா, நடுவில கொஞ்ச பக்கத்தை காணோம், சூது கவ்வும், நேரம் பட டைரக்டர்களே.. உங்களுக்கு நேரம் அவ்வளவாக சரியில்லை. போட்டிக்கு ஆள் வரப்போகிறது, உஷார்!
viruvirupu.com

கருத்துகள் இல்லை: