ஞாயிறு, 16 மே, 2010

யாழ் குடாநாட்டில் கடுகதி சிற்றூர்தி சேவை!

யாழ் நகரில் ஏழு பிரதான இடங்களுக்கு எதிர்வரும் 20ம் திகதி முதல் கடுகதி சிற்றூர்திச் சேவை பரீட்சார்த்தமாக இடம்பெறவுள்ளது.

இச் சேவைகள் பயனளிக்குமாயின் மேலும் சில இடங்களுக்கு இச்சேவை விஸ்தரிக்கப்படுமென யாழ் மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையாளர் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ் நகரத்திலிருந்து புங்குடுதீவு பருத்தித்துறை கொடிகாமம் காரைநகர் மாதகல் குறிகட்டுவான் ஊர்காவற்துறை ஆகிய ஏழு இடங்களுக்கும் கடுகதிச் சிற்றூர்திச் சேவை நடைபெறவுள்ளன.

மேற்படி சேவையில் போக்குவரத்து அனுமதிபெற்ற சிற்றூர்திகள் மட்டுமே சேவையில் ஈடுபடவுள்ளன. இதில் பயணம் செய்யும் பிரயாணிகள் வழமையான பஸ் கட்டணத்துடன் மேலதிகமாக 10 ரூபா கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் இச் சேவையில் ஈடுபடும் பஸ்களில் காணப்படும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: