சனி, 22 மே, 2010

நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி உயர்மட்டக் குழு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கவனிக்கவென புதிய எம்.பிக்களைக் கொண்ட உயர்மட்டக் குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்ட எம். பியும், இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ இதற்குத் தலைமை தாங்குவார்.

இந்தக் குழுவில் இடம்பெறும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கிளிநொச்சிப் பகுதிக்கு வாராவாரம் சென்று அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்வர்.
இதற்கேற்ற வகையில், ஒவ்வொரு எம். பிக்களுக்கும் வெவ்வேறு துறைகள் தனித் தனியாக வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி குழுவின் தலைவரான நாமல் ராஜபக்ஷ இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பாரெனத் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை: