சனி, 22 மே, 2010

நடிகர் ராமராஜன் ,குஷ்பு பதவி கிடைக்கும் என்பதற்காகவே திமுகவில்

மதுரை: எம்.எல்.சி. பதவி கிடைக்கும் என்பதற்காகவே திமுகவில் போய்ச் சேர்ந்துள்ளார் நடிகை குஷ்பு என அதிமுக நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.

மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர்.மன்றபொதுக் கூட்டத்தில் ராமராஜன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தி.மு.க.வில் தற்போது நடிகை குஷ்பு சேர்ந்து இருக்கிறார். இவர் மேல்சபை பதவியை பெறுவதற்காகத்தான் அந்த கட்சியில் சேர்ந்துள்ளார். அவரால் தி.மு.க.வுக்கு எந்த வகையில் லாபம் கிடைக்கும் என்பது போகப்போகத் தெரியும்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வருவார். இதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

தமிழக மக்களுக்கு பல்வேறு சாதனைகளை செய்து விட்டதாக தி.மு.க. அரசு கூறி வருகிறது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட தி.மு.க. தயாரா? என்று கேட்கிறேன்.

பல கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு வந்தாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை: